| படம்: எல்.சீனிவாசன் |

 
தமிழகம்

மேகேதாட்டுவில் அணை கட்டினால் கர்நாடக அரசுக்கு எதிராக போராடுவோம்: தமிழக காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தி​யமூர்த்தி பவனில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் ப.மாணிக்​கம் தாகூர் தலை​மை​யில் நேற்று செயற்​குழுக் கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் முக்​கிய தலை​வர்​கள் பலர் கலந்து கொண்​டனர். கூட்​டத்​தில், ‘பு​தி​தாக நியமிக்​கப்​பட்​டுள்ள மாநிலத் தலை​வர் மாணிக்​கம் தாகூருக்கு வாழ்த்​து; தவெக ஆட்​சி​யில் சுற்​றுலாத்​துறை அமைச்​ச​ராகப் பொறுப்​பேற்​றுள்ள சட்​டப்​பேரவை காங்​கிரஸ் தலை​வர் செ.ராஜேஷ்கு​மார் மற்​றும் உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் பெ.விஸ்​வ​நாதன் ஆகியோ​ருக்கு வாழ்த்​துகள்.

காம​ராஜரின் பிறந்​த​நாளான ஜூலை 15 அன்று தமிழகம் முழு​வதும் ஒருவார காலத்​திற்கு காங்​கிரஸ் கொடியேற்​றி, நலத்​திட்ட உதவி​கள் வழங்க வேண்​டும். இதனுடன், ‘லஞ்​சம் தவிர் - நெஞ்​சம் நிமிர்’ என்ற முழக்​கத்​துடன் ‘ஊழல் ஒழிப்பு பிரச்​சார இயக்​கம்’ நடத்த வேண்​டும்.

எஸ்​.எஸ்.ஏ.-2 திட்​டத்​தின்​படி வட்​டார, நகர, கிராம கமிட்​டிகளைச் சீரமைக்க மாவட்​டந்​தோறும் பார்​வை​யாளர்​களை அனுப்​ப​வும், அகில இந்​திய காங்​கிரஸ் வழி​காட்​டு​தலின்​படி 5 வாக்​குச்​சாவடிகளுக்கு ஒரு ‘மண்​டலக் காங்​கிரஸ் கமிட்​டி’யை உடனடி​யாக அமைக்க வேண்​டும்.

அயோத்தி ராமர் கோயில் அறக்​கட்​டளை நன்​கொடைகளில் ரூ.7.5 கோடி வரை கையாடல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக சிறப்பு விசா​ரணைக் குழு நடத்​திய விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

முறை​கேடு வெளிச்​சத்துக்கு வரு​வதற்கு முன்பு நாளொன்​றுக்கு சராசரி​யாக ரூ.16 லட்​சம் முதல் ரூ.18 லட்​சம் வரை வந்த நன்​கொடை, தற்​போது ரூ.24 லட்​சம் முதல் ரூ.26 லட்​ச​மாக உயர்ந்​துள்​ளது.

இதன்​மூலம் தின​மும் ரூ.6 லட்​சம் முதல் ரூ.8 லட்​சம் வரை கையாடல் செய்​யப்​பட்​டிருக்​கலாம் எனப் புல​னாய்​வாளர்​கள் மதிப்​பிடு​கின்​றனர்.ராமர் கோயிலை தேர்​தல் பரப்​புரை​யாகப் பயன்​படுத்தி பாஜக 12 ஆண்​டு​கள் மக்​கள் விரோத ஆட்சி நடத்தி வரும் நிலை​யில், தற்​போது வெளிவந்​துள்ள இந்த ஊழல் நாட்டு மக்​களை அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. ராமர் கோயில் நிர்​வாகம் தனிப்​பட்ட அறக்​கட்​டளை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ளது.

அது தனி​யார் அறக்​கட்​டளை என்​ப​தால் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் தகவல் தர உள்​துறை அமைச்​சகம் மறுத்​து​விட்​டது.

எனவே, பொது​மக்​கள் நன்​கொடை​யில் கட்​டப்​பட்ட ராமர் கோயி​லில் நடப்​பவற்றை மக்​கள் அறிந்​து​ கொள்​ளும் வகை​யில்,அதை தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் வரம்​பிற்​குள்​ கொண்​டு வர வேண்​டும்​” என தீர்​மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT