தமிழகம்

மேகேதாட்டு விவகாரம், காவிரி நீரை திறப்பது தொடர்பாக‌ ஆகஸ்ட் 3-ல் டி.கே.சிவகுமாரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்

இரா.வினோத்

பெங்களூரு: உச்​ச நீ​தி​மன்ற தீர்ப்​பின்​படி தமிழகத்​துக்கு கிடைக்க வேண்​டிய காவிரி நதி நீரை திறப்​பது மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்​பாக விவா​திப்​ப​தற்​காக கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மாரை தமிழக முதல்​வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி சந்​திக்​கிறார். இந்த தகவலை தமிழக வேளாண் துறை அமைச்​சர் வினோத் உறுதிப்படுத்​தி​யுள்​ளார்.

காவிரி நதி நீர் பங்​கீட்டு வழக்கை விசா​ரித்த உச்​சநீ​தி​மன்​றம், ‘ஆண்​டு​தோறும் கர்​நாட​கா, தமிழகத்​துக்கு 177.25 டிஎம்சி நீரை மாதந்​தோறும் பிரித்து வழங்க வேண்​டும்’ என தனது இறுதி தீர்ப்​பில் உத்​தர​விட்​டது. ஆனால் கர்​நாட​கா​வில் நிகழாண்​டில் தென்​மேற்கு பரு​வ​மழை வழக்​கத்​தை​விட குறை​வாக பெய்​தது. இதனால் காவிரி​யின் குறுக்​கே​யுள்ள கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹாரங்​கி, ஹேமாவதி ஆகிய 4 அணை​களி​லும் 53 சதவீதம் அளவுக்கே நீர் இருப்​பில் உள்​ளது.

இதன் காரணங்​களை சுட்​டிக்​காட்டி கர்​நாடக அரசு, க‌டந்த புதன்​கிழமை டெல்​லி​யில் நடந்த காவிரி மேலாண்மை ஆணை​யக் கூட்​டத்​தில் தமிழகத்​துக்கு நீரை திறந்​து​விட மறுத்​தது. இதனை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணை​யம், நீர் திறப்​பது தொடர்​பாக கர்​நாடகா​வுக்கு எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்​க​வில்​லை. இதற்கு தமிழகத்​தில் உள்ள விவ​சாய அமைப்​பினரும் எதிர்க்​கட்​சி​யினரும் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர்.

கடந்த ஜூலை 22-ம் தேதி நில​வரப்​படி, கர்​நாடகா தமிழகத்​துக்கு 3.5 டிஎம்சி நீரை மட்​டுமே திறந்​து​விட்​டுள்​ளது. தென்​மேற்​குப் பரு​வ​மழை பெய்​யாததைக் கணக்​கில் கொண்​டாலும், தமிழகத்​திற்கு மேலும் 3 டிஎம்சி நீரை திறந்​து​விட்​டிருக்க வேண்​டும் என நீர்ப்​பாசன கழக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

பேச்​சு​வார்த்​தைக்கு அழைப்பு: இந்​நிலை​யில் தமிழக முதல்​வர் விஜய் காவிரி நதி நீர் பங்​கீடு தொடர்​பாக கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மாருடன் விவா​திக்க முடி​வெடுத்​த​தாக கூறப்​படு​கிறது. அதன்​படி, கர்​நாடக அரசுக்கு அனுப்​பப்​பட்ட கடிதத்​தில், வரு​கிற ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதிக்​குள் முதல்​வர் டி.கே.சிவகு​மாரை சந்​திக்க ஏற்​பாடு செய்​யு​மாறு தமிழக அரசு கர்​நாடக அரசுக்கு கடிதம் எழு​தி​யுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதனை பரிசீலித்த கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் தரப்​பில் ஆகஸ்ட் 3-ம் தேதி சந்​திக்க ஒப்​புதல் அளித்​துள்​ளார். எனவே இரு முதல்​வர்​களும் அன்​றைய தினம் பெங்​களூரு​வில் சந்​திக்க இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. இந்த தகவலை இரு மாநில அரசுகளும் அதி​காரப்​பூர்​வ​மாக தெரிவிக்​காத நிலை​யில், தமிழக வேளாண்​துறை அமைச்​சர் ஆர்​.​வினோத் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

வேளாண் அமைச்சர் தகவல்: தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணத்​தில் வணி​கவரித் துறை புதிய கட்​டிடம், மாவட்ட அரசு மருத்​து​வ​மனை சித்​தமருத்​துவ பிரிவு கட்​டிடம் மற்​றும் ஒருங்​கிணைந்த பொதுசு​கா​தார ஆய்​வகம் ஆகிய​வற்றை நேற்று திறந்து வைத்த தமிழக வேளாண் துறை அமைச்​சர் வினோத் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: கர்​நாடக அரசு மேகே​தாட்​டு​வில் அணை கட்ட தமிழக அரசு ஒரு​போதும் அனு​ம​திக்​காது. காவிரி நமது உரிமை. அதை விட்​டுக் கொடுக்க மாட்​டோம் என ஆரம்​பத்​திலிருந்து சொல்​லிக் கொண்​டிருக்​கிறோம்.

கர்​நாட​கா​வில் ஆக.3-ம் தேதி மேகே​தாட்டு தொடர்​பாக ஆலோ​சனை கூட்​டம் நடை​பெறுகிறது. இதில் தமிழக முதல்​வர் விஜய் கலந்து கொண்டு கர்​நாடக முதல்​வர் சிவகு​மாரிடம் பேச உள்​ளார்​.கர்​நாடக அரசு தரப்​பில் போதிய மழை இல்லை என்​ப​தால் தண்​ணீர் திறக்க முடி​யாது என கூறி வரு​கின்​றனர். இருந்​தா​லும் தமிழக முதல்​வர் நமது உரிமையை கேட்​டுப் பெறு​வார். இவ்வாறு அமைச்​சர் வினோத் தெரிவித்தார்.

முந்​தைய சந்​திப்​பு​கள்: 1990‍ல் காவிரி நடு​வர் மன்​றம் அமைக்​கப்​படு​வதற்கு முன்​ன​தாக, 1968 முதல் 1990 வரையி​லான காலக்​கட்​ட‌த்​தில் 26 முறை இரு மாநிலங்​களுக்​கிடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றுள்​ளன. 1996ல் தமிழக முதல்​வ​ராக இருந்த கருணாநி​தி​யும், கர்​நாடக முதல்​வ​ராக இருந்த ஜே.எச். படேலும் சந்​தித்து பேசி​யுள்​ளனர். 2012ல் உச்ச நீதி​மன்​றத்​தின் பரிந்​துரை​யின்​படி தமிழக முதல்​வ​ராக இருந்த ஜெயலலிதா கர்​நாடக முதல்​வர் ஜெகதீஷ் ஷெட்​டரை சந்​தித்​துப் பேசி​னார்.

2016ல் காவிரி நதி நீர் பங்​கீடு தொடர்​பாக விவா​திக்க மத்​திய அரசு டெல்​லி​யில் இரு மாநில முதல்​வர்​களுக்​கும் அழைப்பு விடுத்​தது. அப்​போது முதல்​வ​ராக இருந்த ஜெயலலி​தாவுக்கு உடல் நலக்​குறைவு ஏற்​பட்​ட​தால் அந்த கூட்​டத்​துக்கு செல்​ல​வில்​லை. தமிழக பொதுப்​பணித்​துறை அமைச்​ச​ராக இருந்த எடப்​பாடி பழனி​சாமி, அப்​போதைய கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யாவை சந்​தித்து பேசி​னார்.

இந்த சந்​திப்​புக்கு பின்​னர் கடந்த 10 ஆண்​டு​களாக இரு மாநில முதல்​வர்​களும் சந்​தித்து கா​விரி விவ​காரம் குறித்து பேச​வில்​லை. தற்​போது தமிழக முதல்​வர்​ விஜய்​, கர்​நாடக முதல்​வர்​ டி.கே.சிவகு​மாரை சந்​திக்​க இருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT