தமிழகம்

பொங்கல் ரொக்கப் பரிசு தொகையை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக பாஜக வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பரிசு தொகையை ரூ.3 ஆயிரத்​தில் இருந்து ரூ.8 ஆயிர​மாக உயர்த்தி வழங்க வேண்​டும் என, பாஜக வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இது குறித்​து, தமிழக பாஜக செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​. பிர​சாத் வெளி​யிட்ட அறிக்​கை: அதி​முக ஆட்​சி​யில் 2021–ல் பொங்கல் பரிசு உடன் ரூ.2,500 பொங்கல் பரிசு பணம் ரொக்​க​மாக வழங்​கப்​பட்​டது.

ஆனால், திமுக அரசு பொறுப்​பேற்​றதும் 2023, 2024-ம் ஆண்டு பொங்கல் பரி​சாக ஆயிரம் ரூபாய் மட்​டுமே தரப்​பட்​டது. கடந்த 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசு ரொக்​கப் பணம் எது​வும் வழங்​காமல், தமிழக மக்​களை ஏமாற்​றியது.

திமுக அரசு பொறுப்​பேற்​றவுடன் 2022 முதல் தற்​போதைய 2025-ம் ஆண்டு பொங்கல் வரை, தமிழக மக்​களுக்கு பொங்கல் பரி​சாக தமிழக அரசு, கடந்த கால அதி​முக ஆட்​சி​யில் அறிவிக்​கப்​பட்​டபடி அளித்​திருக்க வேண்​டிய தொகை ரூ.10 ஆயிரம்.

ஆனால், தமிழக மக்​களுக்கு தரவேண்​டிய பொங்கல் பரிசுப் பணத்​தில் 2022 முதல் 2025-ம் ஆண்டு வரை ரூ.8 ஆயிரத்தை கொடுக்​காமல், 2026-ம் ஆண்டு மட்​டும் ரூ.3 ஆயிரம் அதி​கபட்ச பணத்தை அள்​ளித் தரு​வது போல், தேர்​தலுக்​காக மக்​களை ஏமாற்றி வாக்​கு​களை பறிப்​ப​தற்​காக, தமிழக அரசு நாடகம் ஆடு​வது வெட்​கக் கேடானது.

திமுக அரசு பொறுப்​பேற்​றவுடன், 2021-ம் ஆண்டு அதி​முக அரசு தமிழக மக்​களுக்கு வழங்​கியது போல் வழங்கி இருக்க வேண்​டிய தொகை​யில், திமுக அரசு கொடுக்​காமல் ஏமாற்​றிய ரூ.5 ஆயித்​தை​யும், தற்​போதைய பொங்கல் பரிசு ரூ.3 ஆயிரம் சேர்த்​து, தமிழக மக்​களுக்கு ரூ.8 ஆயிரம் பொங்கல் பரிசை முதல்​வர் ஸ்டா​லின் நியாய​மாக, நேர்​மை​யாக அறிவிக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளர்.

SCROLL FOR NEXT