எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆதரவு தெரிவித்து வெளியிட்ட முதல்வரின் அறிக்கைகளை திருப்பி அனுப்பிய அரசு மருத்துவர்கள்

பெரு​மாள் பிள்ளை

பெரு​மாள் பிள்ளை

Updated on
1 min read

சென்னை: எ​திர்க்​கட்​சித் தலை​வ​ராக மு.க. ஸ்​டா​லின் இருந்​த​போது, அரசு மருத்​து​வர்​களுக்கு ஆதர​வாக விடுத்த அறிக்​கைகளை, அவருக்கே இ-மெ​யில், தபால் மூல​மாக திருப்பி அனுப்​பும் போராட்​டத்தை அனைத்து அரசு மருத்​து​வர்​களும் தொடங்​கி​யுள்​ளனர்.

இது தொடர்​பாக நேற்று சென்​னை​யில் அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மற்ற மாநிலங்​களில் எம்​பிபிஎஸ் மருத்​து​வர்​களுக்கு தரப்படும் ஊதி​யத்​தை​விட ரூ.40 ஆயிரம் குறை​வாக இங்​குள்ள சிறப்பு மற்​றும் உயர் சிறப்பு மருத்​து​வர்​களுக்கு ஊதி​யம் வழங்​கப்​படு​கிறது.

கோரிக்​கைகளை நிறை வேற்ற அரசை வலி​யுறுத்தி 2019-ம் ஆண்டு மருத்துவர்கள் உண்​ணா​விரதம் மேற்​கொண்ட போது, அன்று எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்த மு.க.ஸ்​டா​லின், நேரடி​யாக வந்து பக்​கத்​தில் அமர்ந்து ஆதரவு தந்​ததை நன்​றியோடு நினை​வுப்​படுத்த விரும்​பு​கிறோம். அப்​போது, மருத்துவர்கள் தங்​களை வருத்​திக் கொள்ள வேண்​டாம் என கேட்​டுக்​கொண்​டார்.

மேலும் திமுக ஆட்சி அமைந்​ததும், மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன் படி, உரிய ஊதி​யம் வழங்​கப்​படும் என மருத்​து​வர்​களிடம் சத்​தி​யம் செய்​ததை யாருமே மறக்​க​வில்​லை. ஊதிய கோரிக்கை போராட்​டத்​தில் லட்​சுமி நரசிம்​மன் உயி​ரிழந்​துள்​ளார்.

அதே​போல், கரோனா பணி​யில் உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் மனைவி திவ்யா அரசு வேலை கேட்டு நான்​கரை ஆண்​டு​களாக கண்​ணீர் விட்ட பிறகும் அரசு கருணை காட்​ட​வில்​லை. எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்​த​போது அளித்த வாக்​குறு​தி​யின்​படி, அரசானை 354-ன்​படி அரசு மருத்​து​வர்​களுக்கு ஊதி​யம் வழங்க வேண்​டும். கரோனா பணி​யில் உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்​டும்.

எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக மு.க.ஸ்​டா​லின் இருந்​த​போது, அரசு மருத்​து​வர்​களுக்கு ஆதர​வாக விடுத்த அறிக்​கைகளை, அவருக்கே இ-மெ​யில், தபால் மூல​மாக திருப்பி அனுப்​பும் போராட்​டத்தை அனைத்து அரசு மருத்​து​வர்​களும் தொடங்​கி​யிருக்​கிறோம்​. இது நிச்​ச​யம்​ முதல்​வரின்​ கவனத்​துக்​கு கொண்​டு செல்​லப்​பட்​டு, கோரிக்​கைகள்​ நிறைவேற்​றப்​படும்​ என நம்​பு​கிறோம்​. இவ்​​வாறு அவர்​ தெரிவித்​​தார்​.

<div class="paragraphs"><p>பெரு​மாள் பிள்ளை</p></div>
பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in