தமிழகம்

கும்பாபிஷேகத்தில் ‘பாஸ்’ இருந்தால் முக்கியத்துவமா? - அறநிலையத் துறைக்கு தமிழக பாஜக கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக ஆன்​மிகம், கோயில் மேம்​பாட்டு பிரிவு மாநிலச் செய​லா​ளர் எஸ்​.​வினோத் ராகவேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடலூர் பாடலீஸ்​வரர் கோயில் கும்​பாபிஷேகம், 15 ஆண்​டு​களுக்​குப் பிறகு கடந்த 24-ம் தேதி நடை​பெற்​றது.

புராதனக் கோயில் என்​ப​தால், ஒவ்​வொரு சீரமைப்பு பணி​யும் தொல்​லியல் துறை​யின் பரிந்​துரைப்​படியே நடை​பெற வேண்​டும் என்​பது நீதி​மன்ற உத்​தர​வு. ஆனால், எந்​த​வித முறை​யான பரிந்​துரை​யும் இன்றி பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

திருப்​பணிக்​காக வாரி வழங்​கிய உபய​தா​ரர்​களுக்கு அழைப்​பிதழ்​கூட வழங்​கப்​பட​வில்​லை. பக்​தர்​களை​விட ‘பாஸ்’ வைத்​திருப்​பவர்​களுக்கே முக்​கி​யத்​து​வம் கொடுத்த அறநிலை​யத் துறைக்கு இந்த கும்​பாபிஷேக மேலாண்​மை​யில் கிடைப்​பது ‘பெ​யில்’ மார்க் மட்​டுமே. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

          
SCROLL FOR NEXT