கோப்புப்படம்

 
தமிழகம்

இரங்கல் தீர்மானம், மவுன அஞ்சலியுடன் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை​யின் இந்த ஆண்​டின் முதல் கூட்​டம் நேற்று முன்​தினம் தொடங்​கியது. இதில் பங்​கேற்ற ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடர்ந்து 3-வது ஆண்​டாக தன் உரையை வாசிக்​காமல் பேர​வையை விட்டு வெளி​யேறி​னார். இதையடுத்து அரசு தயாரித்த ஆளுநர் உரையை அவர் படித்​த​தாக அவைக் குறிப்​பில் பதிவு செய்​யும் தீர்​மானத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கொண்​டு​வந்​தார். இந்த தீர்​மானம் குரல் வாக்​கெடுப்பு மூலம் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது.

தொடர்ந்து ஜன.24 வரை பேர​வைக் கூட்​டத்​தொடர் நடை​பெறும் என்று பேரவைத் தலை​வர் மு.அப்​பாவு அறி​வித்​தார்.

          

இந்​நிலை​யில் ​பேர​வை​யின் 2-வது நாள் கூட்​டம் நேற்று கூடியது. அதில் மறைந்த முன்​னாள் எம்எல்ஏக்கள் சா.பன்​னீர்​செல்​வம், எல்​.கணேசன் மறைவுக்கு இரங்​கல் குறிப்பு வாசிக்​கப்​பட்டது. தொடர்ந்​து, கவிஞர் ஈரோடு தமிழன்​பன், தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், திரைப்பட தயாரிப்​பாளர் ஏ.வி.எம்​.சர​வணன், மக்​களவை முன்​னாள் தலை​வர் சிவ​ராஜ் பாட்​டீல், திமுக எம்​எல்ஏ கு.பொன்னு​சாமி ஆகியோ​ருக்​கும் இரங்​கல் தீர்​மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த இரங்​கல் குறிப்பு​கள் வாசிக்கப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்​சலி செலுத்தினர். அத்துடன் கூட்​டம் நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்டது.

SCROLL FOR NEXT