தமிழக சட்​டப்​பேர​வை | கோப்புப்படம்

 
தமிழகம்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சிபிஐ விசாரிக்க பேரவையில் வலியுறுத்தல்

தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘‘​கர்​நாடக மாநிலத்​தில் 3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று தமிழக சட்​டப்​பேர​வை​யில் உறுப்​பினர்​கள் வலி​யுறுத்​தி​னர். பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு தலா ரூ.10 லட்​சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்​துள்​ள​தாக அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார்.

கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ் நகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அருகே வனப்​பகு​தி​யில் 3 தமிழர்​கள் வனத்​துறை​யின​ரால் கடந்த 15-ம் தேதி சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். மான் வேட்​டைக்கு வந்த போது 3 பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்​ட​தாக கர்​நாடகா தரப்​பில் கூறப்​பட்​டது.

இதுதொடர்​பாகத் தமிழக சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநி​தி, முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி உள்​ளிட்​டோர் நேற்று சிறப்பு கவன ஈர்ப்​புத் தீர்​மானம் கொண்டு வந்​தனர்.

அப்​போது பழனி​சாமி பேசி​ய​தாவது: கர்​நாடக வனத்​துறை​யின​ரால் 3 தமிழர்​கள் சுட்​டுக்​கொல்​லப்​பட்​ட​தில் மிகப்​பெரிய சதி நடை​பெற்று இருப்​ப​தாக பாதிக்​கப்​பட்டவர்கள் புகார் தெரி​வித்​துள்​ளனர். இந்த வழக்​கில் நியாய​மான விசா​ரணை நடை​பெற வேண்​டுமெனில் சிபிஐ விசா​ரணைக்கு உட்​படுத்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும். தமிழக அரசு சார்​பில் பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்​குத் தேவை​யான அனைத்து உதவி​களை​யும் செய்ய வேண்​டும். இப்​பிரச்​சினை​யின் உண்மை நில​வரத்​தைத் தமிழக மக்​களுக்கு அரசு தெரிவிக்க வேண்​டும்.

திமுக எம்​எல்ஏ மனோஜ் பாண்​டியன்: இந்​தத் துப்​பாக்​கிச் சூட்​டில் மனித உரிமை மீறல் நடை​பெற்​றுள்​ளது. இந்​தப் போலி என்​க​வுன்​ட்டரை தேசிய மனித உரிமை ஆணை​யத்​தில் தெரி​வித்​திருக்க வேண்​டும். இதில் உச்ச நீதி​மன்ற வழி​காட்​டு​தல் மீறப்​பட்​டுள்​ளது. இச்​சம்​பவம் குறித்து தெளி​வான நீதி விசா​ரணை நடத்த வேண்​டும்.

இவர்​களைத் தொடர்ந்து பாமக எம்​எல்ஏ கணேஷ்கு​மார், காங்​கிரஸ் எம்​எல்ஏ தாரகை கத்​பர்ட், இந்​தி​யக் கம்​யூனிஸ்ட் எம்​எல்ஏ டி.​ராமச்​சந்​திரன் ஆகியோர் துப்​பாக்​கிச் சூடு தொடர்​பாகச் சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் என வலி​யுறுத்​தினர்.

அமைச்​சர் சிடிஆர் நிர்​மல்​கு​மார் கூறிய​தாவது: கர்​நாடக மாநிலம், சாம்​ராஜ் நகர் மாவட்​டம், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு அரு​கில் உள்ள பாது​காக்​கப்​பட்ட வனப்​பகு​தி​யில் கடந்த ஆக.15-ம் தேதி கர்​நாடக வனத்​துறை​யின் வேட்டை தடுப்பு நடவடிக்​கை​யில் அந்​தோணி​சாமி, ஜான்​ரோஸ் பீட்​டர், குமார் ஆகிய 3 தமிழர்​கள் சுட்​டுக்​கொல்​லப்​பட்​டனர். பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு கர்​நாடக அரசு இடைக்​கால நிவாரண​மாக தலா ரூ.5 லட்​சம் அறி​வித்​துள்​ளது.

இச்​சம்​பவம் தொடர்​பாக உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று கர்​நாடக அரசு உறுதி அளித்​துள்​ளது. வனத்​துறை துப்​பாக்​கிச் சூடு சம்​பவம் குறித்து முறை​யான நீதி விசா​ரணைக்​குக் கர்​நாடக முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார். துப்​பாக்​கிச் சூடு சம்​பவம் நடை​பெற்ற சூழல், முதலில் சுட்​டது யார் என நீதிபதி தலை​மையி​லான குழு ஆய்வு செய்​யும் என கர்​நாடக அரசு தெரி​வித்​துள்​ளது.

விசா​ரணைக்​குப் பின் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்​குக் கூடு​தல் நிவாரணம் வழங்​கப்​படும். அதற்​கான விவரங்​கள் இறுதி செய்​யப்​பட்டு வரு​வ​தாகக் கர்​நாடக அரசு உறுதி அளித்​துள்​ளது. பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் புகாரின் பேரில் வனத்​துறை அதி​காரி​கள் மீது அன்​னூர் காவல் நிலை​யத்​தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

உயி​ரிழந்த குடும்​பத்​தினருக்கு தமிழக முதல்​வர் விஜய் ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்​ளார். உயர்​மட்ட விசா​ரணைக் குழு அமைத்து தவறு செய்​தவர்​களுக்கு உரிய தண்​டனை வழங்​கப்பட வேண்​டும் என்று முதல்​வர் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இவ்​வாறு அமைச்​சர் நிர்​மல்​கு​மார் கூறி​னார்.

வனத்​துறை அமைச்​சர் ரஞ்​சித் குமார் கூறுகை​யில், ‘‘முதல்​வரின் ஆணைக்​கிணங்க, துப்​பாக்​கிச் சூட்​டில் உயி​ரிழந்த மூவரின் குடும்​பத்​துக்​கும் தலா ரூ.10 லட்​சம் வனத்​துறை அதி​காரி​களு​டன்​ கலந்​தாலோ​சித்​து வழங்​கப்​படும்’’ என்​று தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT