தமிழகம்

அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த புகாரால் திரிணமூல் கட்சியின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.440 கோடி பணம் முடக்கம்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் அளித்த புகாரைத் தொடர்ந்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் வங்​கிக் கணக்​கில் உள்ள ரூ.440 கோடியை போலீ​ஸார் முடக்​கி​யுள்​ளனர்.

கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக அதிக இடங்​களைக் கைப்​பற்றி ஆட்​சி​யில் அமர்ந்​துள்​ளது. ஆளுங்​கட்​சி​யாக இருந்த திரிண​மூல் காங்​கிரஸ் 80 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது. இந்த நிலை​யில், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் 60-க்​கும் மேற்​பட்ட எம்​எல்​ஏக்​கள் கட்​சித் தலை​வர் மம்தா பானர்​ஜிக்கு எதி​ராக போர்க்​கொடி தூக்கி தனி அணி​யாக செயல்​பட்டு வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் சைபர் கிரைம் போலீ​ஸில் ஒரு புகார் கொடுத்​துள்​ளனர். அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் பெயரில் வங்​கி​யில் 3 கணக்​கு​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இதில் ரூ.440 கோடிக்​கும் அதி​க​மான பணம் வரவு வைக்​கப்​பட்​டுள்​ளது.

செல்​வாக்கை தவறாகப் பயன்​படுத்​துதல், நேர்​மையற்ற நிதிப் பரிவர்த்​தனை​கள், சந்​தேகத்​துக்​குரிய வகை​யில் சட்ட விரோத​மாகப் பணம் திரட்​டு​தல் உள்​ளிட்ட சட்​ட​விரோதச் செயல்​கள் மூலம் பெறப்​பட்ட தொகை, பல்​வேறு வழிகளில் மாற்​றப்​பட்டு வங்​கிக் கணக்​கு​களில் டெபாசிட் செய்​யப்​பட்​டிருக்​கலாம் என்று நம்​பத்​தகுந்த வட்​டாரங்​கள் மூலம் எங்​கள் கவனத்​துக்கு வந்​துள்​ளது.

எனவே, இந்த வங்​கிக் கணக்​கு​களை முடக்கி வைக்க வேண்​டும். கட்​சிக்​குள் அதி​காரக்குழப்​பம் நில​வு​கிறது. அது சரி​யாகும் வரை, கட்​சிப் பணத்தை பரி​மாற்​றம் செய்​வதை தடுக்க வேண்​டும். இவ்​வாறு அந்த புகாரில் கூறப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து கொல்​கத்​தாவைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, ‘‘எம்​எல்​ஏக்​கள் அளித்த புகாரைத் தொடர்ந்​து, திரிணமூல் கட்சியின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.440 கோடி முடக்​கப்​பட்​டுள்​ளது. இனிமேல் பணத்தை எடுக்​கவோ, மற்​றொரு கணக்​குக்கு மாற்​றவோ முடி​யாது. இந்த வங்​கிக் கணக்​கு​களுக்​குப் பணம் எங்​கிருந்து வந்​தது என்​பது போன்ற விவரங்​களை​யும் எம்எல்ஏக்கள் கேட்​டுள்​ளனர்’’ என்​றார்.

SCROLL FOR NEXT