தமிழகம்

ஜன.1 முதல் 9 மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: திருத்தணி- சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில், அரக்கோணத்தில் காலை 5.50 மணிக்கு பதிலாக, அதிகாலை 5.55 மணிக்கு அடையும்.

அரக்கோணம் - சென்ட்ரலுக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், காலை 10 மணிக்கு பதிலாக காலை 9.50 மணிக்கு புறப்படும். திருத்தணி - சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 2.40 மணிக்கு பதிலாக பிற்பகல் 2.55 மணிக்கு அடையும்.

கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 8.05 மணிக்கு புறப்படும். சூலூர்பேட்டை - சென்ட்ரலுக்கு இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 9.05 மணிக்கு புறப்படும்.

கும்மிடிப்பூண்டி - சென்ட்ரலுக்கு இரவு 9.25 பதிலாக இரவு 9.4 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு - கடற்கரைக்கு மாலை 6 மணிக்கு பதிலாக மாலை 6.05 மணிக்கு புறப்படும்.

செங்கல்பட்டு - கடற்கரைக்கு மாலை 6.40 மணிக்கு பதிலாக, மாலை 6.30 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு - கடற்கரைக்கு இரவு 10.10 மணிக்கு பதிலாக, இரவு 10.20 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT