தமிழருவி மணியன் மனைவி காலமானார்

தமிழருவி மணியன் மனைவி காலமானார்
Updated on
1 min read

சென்னை: த​மாகா மூத்த தலை​வர் தமிழருவி மணி​யன் மனைவி பிரேமகு​மாரி உடல்​நலக் குறை​வால் கால​மா​னார். தமிழருவி மணி​யனின் மனைவி பிரேமகு​மாரி (71), உடல்​நலக் குறை​வால், வடபழனி​யில் உள்ள சிம்ஸ் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார்.

இந்​நிலை​யில், பிரேமகு​மாரி நேற்று காலை கால​மா​னார். இதுபற்றி தகவல் அறிந்​ததும், தமிழருவி மணி​யனின் நெருங்​கிய நண்​பரும், இந்​திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறு​வனரு​மான பாரிவேந்​தர், மருத்​து​வ​மனைக்கு சென்று பிரேமகு​மாரி உடலுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார்.

தொடர்ந்​து, பிரேமகு​மாரி உடல் நெற்​குன்​றத்​தில் உள்ள அவரது வீட்​டில் அஞ்​சலிக்​காக வைக்கப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இன்று காலை அஞ்சலி செலுத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து, அரும்பாக்கம் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in