தமிழகம்

​திரு​வை​யாற்​றில் ஜனவரி 3-ம் தேதி முதல் தியாக​ராஜர் சுவாமிகள் ஆராதனை விழா

Ellusamy Karthik

தஞ்​சாவூர்: திரு​வை​யாற்​றில் தியாக​ராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா வரும் 3-ம் தேதி தொடங்​கு​கிறது.

ஜன. 3-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை​பெறும் தொடக்க விழாவுக்கு தியாகப் பிரம்ம மஹோத்சவ சபா தலை​வர் ஜி.கே.​வாசன் தலைமை வகிக்​கிறார். செய​லா​ளர் அரித்​து​வா​ர மங்​கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்​கிறார். சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி சுரேஷ்கு​மார், குத்​து​விளக்​கேற்றி விழா​வைத் தொடங்​கிவைக்​கிறார். சிறப்பு விருந்​தின​ராக ஆட்​சி​யர் பா.பிரி​யங்கா பங்​கஜம் பங்​கேற்​கிறார். சபா செய​லா​ளர் முஷ்ணம் ராஜா​ராவ் நன்றி கூறுகிறார்.

அன்று இரவு சீர்​காழி சிவசிதம்​பரம், திரைப்பட பின்​னணிப் பாடகி மஹதி, ஜெய​ராஜ் கிருஷ்ணன்- ஜெய, திருப்​பதி ஹரி​பாபு குழு​வினரின் பாடல், இசை நிகழ்ச்​சிகள் நடை​பெறுகின்​றன. தொடர்ந்து ஜன. 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பிரபல இசைக் கலைஞர்​கள் பங்​கேற்​கும் பாடல் மற்​றும் நாகசுரம், வயலின், சாக்​ஸ​போன், வீணை, மேண்​டலின் நிகழ்ச்​சிகள் நடை​பெறுகின்றன.

விழா​வின் முக்​கிய நிகழ்​வான பஞ்​சரத்ன கீர்த்​தனை வரும் 7-ம் தேதி நடை​பெற உள்​ளது. அன்று காலை 9 மணி​யள​வில் ஆயிரக்​கணக்​கான இசைக் கலைஞர்​கள், பாடகர்​கள் கலந்​து​கொண்டு ஒரே குரலில் பஞ்​சரத்ன கீர்த்​தனை​களைப் பாடி, தியாக​ராஜ சுவாமிக்கு இசை அஞ்​சலி செலுத்த உள்​ளனர். முன்​ன​தாக, தியாக​ராஜர் வாழ்ந்த இல்​லத்​தில் இருந்து ஊர்​வலம் தொடங்​கி, விழாப் பந்​தலை அடை​யும். அன்று மாலை​யும் பல்​வேறு இசை நிகழ்ச்​சிகள் நடை​பெற்ற பின்​னர், இரவு 11 மணிக்கு ஆஞ்​சநேயர் உற்​சவத்​துடன் விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT