தமிழகம்

அமோனியா வாயுக் கசிவு விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் செயல்பட்டு வரும் இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் ​நிறு​வனத்​தில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது.

இதில், ஓய்வு மற்​றும் பணி​யில் இருந்த தொழிலா​ளர்​கள் 83 பேர் மயக்​கம் அடைந்​தனர். பலருக்கு கண் எரிச்​சல், மூச்​சுத் திணறல் பாதிப்​பு​கள் ஏற்​பட்​டன.

பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உடனடி​யாக மீட்​கப்​பட்​டு, மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனை, சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனை, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இதில் 10 பெண்​கள் ஏற்​கெனவே உயி​ரிழந்த நிலை​யில், சென்னை ஸ்டான்லி மருத்​து​வ​மனை, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை ஆகிய​வற்​றில் சிகிச்சை பெற்று வந்த, ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ரீட்டா ஜுவாங்கா (25), பிங்கி ஜுவாங்கா (23), சுமித்ரா ஜுவாங்கா (26) ஆகிய 3 பெண்​கள் நேற்று உயி​ரிழந்​தனர்.

இதனால் உயிரிழப்பு எண்​ணிக்கை 13 ஆக அதி​கரித்​துள்​ளது. வேல்ஸ், வெங்​கடேஸ்​வரா, ஸ்டான்லி மருத்துவமனைகளில் 20-க்​கும் மேற்​பட்​டோர் சிகிச்சை பெற்​று, தங்​குமிடத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர்.

மற்ற 40-க்​கும் மேற்​பட்​டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில், 27 பேர் தீவிர சிகிச்சை பிரி​வில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இவர்களுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் உள்ளிட்டோர் ஆறு​தல் கூறினர்.

விபத்​துக்கு எதி​ராக திருவள்​ளூரில் மார்க்​சிஸ்ட் கட்சி சார்​பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்​பாட்​டத்தில் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​ குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT