சென்னை: நீட் தேர்வை முற்றாகக் கைவிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி அவர் வெளியிட்ட அறிக்கை: இளநிலை மருத்துவக் கல்விக்கான (எம்பிபிஎஸ்) நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த மே 3-ம் நடைபெற்றது.
ஆனால் அந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தது. அந்தத் தேர்வு செல்லாதென கடந்த மே 13 அன்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதனையடுத்து அதே தேர்வு ஜூன் 21 அன்று மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வே வேண்டாமென தொடக்கத்திலிருந்தே விசிக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இதனைக் கண்டித்தும், நீட் தேர்வு முறையை முற்றாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்தியும் தமிழகம் தழுவிய அளவில் தி.க. ஒருங்கிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கிறது.
சென்னையில் விசிக சார்பில் நான் கலந்துகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.