தமிழகம்

செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவுக்கு பின்னடைவு: திருமாவளவன் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தேர்​தல் ஆணை​யத்​தைப் பயன்​படுத்தி பாஜக அரசு, ஒவ்​வொரு குடிமக​னின் குடி​யுரிமை​யை​யும் சோதனைக்கு உள்​ளாக்​கி​யுள்​ளது.

இது கோடிக்​கணக்​கான மக்​களின் குடி​யுரிமை​யைப் பறிக்​கும். எனவே, ஜனநாயக சக்​தி​கள் எஸ்​ஐஆர் நடை​முறைக்கு எதி​ராக ஒருங்​கிணைய வேண்​டும்.

அதி​முக மூத்த தலை​வர் செங்​கோட்​டையன், அக்​கட்​சி​யில் இருந்து வெளி​யேறு​வது பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கும், அக்​கட்​சிக்​கும் பின்​னடை​வாக அமை​யும்.

அவரது முடி​வின் பின்​னணி​யில் பாஜக, ஆர்​எஸ்​எஸ் அமைப்​பு​கள் இருக்​குமோ என்ற சந்​தேகம் உள்​ளது. அதி​முகவைப் பலவீனப்​படுத்​தும் வகை​யில் பாஜக செயல்​பட்டு வரு​கிறது. இது அதி​முக​வுக்​கும், தமிழக அரசி​யலுக்​கும் நல்​லதல்ல.

தமிழக ஆளுநர் மீண்​டும் மீண்​டும் தமிழக மக்​களின் உணர்​வு​களுக்கு எதி​ரான கருத்​துகளைத் தெரிவிக்​கிறார். அவரைப் பயன்​படுத்தி தமிழக அரசி​யலில் குழப்​பத்தை ஏற்படுத்த மத்​திய அரசு முயற்சிப்​பது கவலை அளிக்​கிறது. இவ்​வாறு திரு​மாவளவன் கூறி​னார்.

SCROLL FOR NEXT