விசிக தலைவர் திருமாவளவன்

 
தமிழகம்

விசிகவில் உள்ள அதிருப்தியாளர்களை இழுக்க திமுக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கடலூர்: எங்களை குறிவைத்தே விமர்சனம் செய்யப்படுவதாகவும் விசிகவில் அதிருப்தியில் உள்ளவர்களை திமுக தங்கள் பக்கம் இழுப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூரில் நடந்த தமிழ்த்​தேசிய எழுச்சி மாநாடு செயற்​குழு கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: சமூகவலை​தளங்​களில் சிலர் விசிக குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வரு​கிறார்​கள்.

தேர்​தலில் 17 தொகு​தி​யில் போட்​டி​யிட்டு 4 தொகு​தி​யில் வென்ற பாமக கட்​டுக்​கோப்​போடு இருக்​கிற​தாம். ஆனால், 8 தொகு​தி​யில் போட்​டி​யிட்டு 2-ல் வெற்​றிபெற்ற விசிக வலிமை இழந்துவிட்​டதாக விமர்​சிக்​கின்​றனர்.

அது​போல திமுக, அதி​முக, பாஜக, நாம்​தமிழர் கட்​சிகளின் இடங்​களும், ஓட்டு சதவீத​மும் குறைந்​ததை யாரும் சரிவு எனப்​பேச​வில்​லை. ஆனால் எவ்​வித பொருளா​தார பின்​புல​மும் இல்​லாமல் 2 தொகு​தி​களில் வெற்றி பெற்ற விசிகவை விமர்​சிப்​ப​தையே சிலர் நோக்​க​மாக கொண்​டுள்​ளனர்.

காழ்ப்​புணர்ச்​சி​யோடு சிலர் சமூக ஊடங்​களில் கத்​துகிறார்​கள். விசிகவை குறி​வைத்தே திமுக விமர்​சனத்தை தீவிரப் படுத்​துகிறது. அதிருப்​தி​யில் உள்​ளவர்​களை தூக்க முயற்​சிக்​கிறது.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நாளை முதல்​வர் விஜய் தலை​மை​யில் விசிக உள்​ளிட்ட தோழமைக் கட்சிநாடாளு​மன்ற உறுப்​பினர்​களின் கலந்​தாய்வு கூட்​டம் நடை​பெற உள்​ளது. தற்​போதைய சூழலில் நாடாளு​மன்ற தொகு​தி​களுக்​கான மறு​வரையறை குறித்த சட்​டம் தேவை​யில்லை என வலி​யுறுத்​து​வதற்​காக நடக்​கும் கூட்​டத்​தில் விசிக பங்​கேற்​கிறது.

அடுத்​தடுத்து வரக்​கூடிய பட்​ஜெட்​டில் பல அறி​விப்​பு​கள், பல திட்​டங்​கள் வரும். ஆகவே இந்தபட்​ஜெட் குறித்து விசிக வேறு கருத்து ஏதும் சொல்ல விரும்​ப​வில்​லை. பழைய திட்​டங்​களின் பெயர் மாற்​றம் செய்​வது வழக்​க​மான ஒன்​று​தான். அதை நான் நியாயப்​படுத்​த​வில்​லை. ஆனால் அதை தவிர்க்க முடியாது.

காவிரி குறித்து அனைத்​துக் கட்சி கூட்​டத்தை கூட்ட வேண்​டும். திமுகவுக்கு அழைப்பு விடுத்​திருந்​தால் அதில் அவர்​கள் பங்​கேற்​பது அவசி​ய​மானது. இவ்வாறு தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT