தமிழகம்

வழிபாட்டு தலங்களில் யாருக்கும் எந்த பாகுபாடும் காட்ட இடமில்லை: ஐகோர்ட் நீதிபதிகள் திட்டவட்டம்

இறைவன் முன்பாக அனைத்து உயிர்களும் சமமே

செய்திப்பிரிவு

சென்னை: இறைவன் முன்​பாக அனைத்து உயிர்​களும் சமமானதே என தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதிகள், வழி​பாட்​டுத் தலங்​களில் யாருக்​கும் எந்த பாகு​பாடும் காட்ட இடமில்லை என திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளனர்.

காஞ்​சிபுரம் தேவ​ராஜ சுவாமிகள் தேவஸ்​தானம், வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் உள்ள மணவாள மாமுனிகள் சன்​ன​தி​யில் பிராமணர் அல்​லாத தென்​கலை வைணவ பக்​தர்​களிடம் சுவாமி தரிசனம் மற்​றும் தீர்த்​தம், பிர​சாதம் வழங்​கு​வ​தில் சாதிய ரீதி​யில் பாகு​பாடு மற்​றும் பாரபட்​சம் பார்க்​கப்​படு​வ​தாகக்​கூறி காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த திருக்​கச்சி நம்பி திரு​மாலடி​யார் சேவா சங்​கத்​தின் செய​லா​ள​ரான மாதவன் ராமானுஜ தாசன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், ‘பி​ராமணர்​கள் மட்​டும் வரத​ராஜப்​பெரு​மாள் கோயி​லில் உள்ள மணவாள மாமுனிகள் சன்​ன​தி​யில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள பிர​தான வாயில் வழி​யாக அனு​ம​திக்​கப்​படும் நிலை​யில், பிராமணர் அல்​லாதோர் பக்​க​வாட்டு வாயில் வழி​யாகவே அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். இதுதொடர்​பாக கோயில் நிர்​வாகத்​திடம் பலமுறை சுட்​டிக்​காட்​டி​யும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கபட​வில்​லை’ எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி. ஜெயச்​சந்​திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் எஸ். சண்​முகசுந்​தர​மும், கோயில் நிர்​வாகம் தரப்​பில் அரசு வழக்​கறிஞர் ஆர். பரணிதரனும், பிற எதிர்​மனு​தா​ரர்​கள் தரப்பில் மூத்த வழக்​கறிஞர் ஹேமா சம்​பத்​தும் ஆஜராகி வாதிட்​டனர்.

அப்​போது கோயில் நிர்​வாகம் தரப்​பில், ‘வரத​ராஜப்​பெரு​மாள் கோயி​லில் ஆழ்​வார்​கள் மற்​றும் ஆச்​சா​ரி​யார்​கள் சன்​ன​தி​கள் உள்ள இடம் மிகக்​குறுகலானது. சேவா கால நேரங்​களில் பணி​யில் இருக்​கும் முறை​தா​ரர்​கள் கூட சன்​ன​திக்​குள் முழு​மை​யாக நிற்க முடி​யாத சூழலில், பொதுபக்​தர்​கள் சன்​ன​திக்கு வெளியே நிறுத்தி வைக்​கப்​படு​கின்​றனர். இதில் வேறு எவ்​வித சாதிய பாகு​பாடும் பார்க்​கப்​படு​வ​தில்​லை. மேலும் குறிப்​பிட்ட காலங்​களை தவிர மற்ற நேரங்​களில் பொது பக்​தர்​கள் சன்​ன​தி​யில் திவ்ய பிரபந்​தம் பாடி இறைவனை வழிபட எந்த தடை​யும் இல்லை . கோயில் தீர்த்​தம் மற்​றும் பிர​சாதம் வழங்​கு​வ​தி​லும் அனைத்து பக்​தர்​களும் சமமாகவே பாவிக்​கப்​படு​கின்​றனர். இனிவரும் நாட்​களி​லும் யாருக்​கும் எவ்​விதப் பாகு​பாடும் காட்​டப்​ப​டாது’ என உத்​தர​வாதம் அளிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி​கள், ‘‘இறைவன் முன்​பாக அனைத்து உயிர்​களும் சமமானதே. இறைவன் யாரிட​மும் எந்த பாகு​பாடும் காட்​டு​வ​தில்​லை. ‘கடவுளின் பார்​வை​யில் அனை​வரும் சமம்’ என்ற பகவத் கீதை​யின் வாசகத்தை சுட்​டிக்​காட்டுகிறோம். வழி​பாட்டு தலங்​களில் இறைவன் முன்​பாக யாருக்​கும் எந்த பாகு​பாடும் காட்ட இடமில்​லை.

எனவே, காஞ்​சிபுரம் வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் சுவாமி தரிசனம், தீர்த்​தம், சடாரி, பிர​சாதம் வழங்​கு​வ​தி​லும், திவ்ய பிரபந்​தங்​களைப் பாடு​வ​தி​லும் சாதிய அடிப்​படை​யில் பக்​தர்​களிடம் எவ்​வித பாகு​பாடும் காட்​டக்​கூ​டாது. இதுதொடர்​பாக கோயில் நிர்​வாகம் அளித்​துள்ள உத்​தர​வாதத்​தை உறு​தி​யாக பின்​பற்​ற வேண்​டும்​’’ என உத்​தர​விட்​டு வழக்​கை முடித்​து வைத்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT