தமிழகம்

“தேசிய கீதம் விஷயத்தில் அவையின் மரபு மாறாது” - பேரவைத் தலைவர் அப்பாவு தகவல்

செய்திப்பிரிவு

தமிழக சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் உரை மீதான விவாதம் வரும் ஜன.24 வரை நடை​பெறும் என பேர​வைத்​தலை​வர் மு.அப்​பாவு தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வைக்​கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் தொடங்​கிய நிலை​யில், கூட்​டம் முடிந்​ததும், ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்​பது தொடர்​பாக முடி​வெடுக்க, அலு​வல் ஆய்​வுக்​குழு கூடியது.

அதன்​பின் பேர​வைத்​தலை​வர் மு.அப்​பாவு செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தினசரி காலை 9.30 மணிக்கு பேரவை கூடும். 21-ந் தேதி (இன்​று),​முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் மறைவுக்கு இரங்​கல் குறிப்பு வாசிக்​கப்​படும்.

பிரபல தொழில​திபர் அருணாசலம் வெள்​ளை​யன், கவிஞர் ஈரோடு தமி​ழன்​பன், தயா​ரிப்​பாளர் ஏ.வி.எம்​.சர​வணன், மக்​களவை முன்​னாள் தலை​வர் சிவ​ராஜ் பாட்​டீல், எம்​.எல்​.ஏ. பொன்​னு​சாமி ஆகி​யோரின் மறைவு குறித்து இரங்​கல் தீர்​மானம் நிறை​வேற்​றப்​படு​வதுடன் பேரவை நிகழ்ச்​சிகள் நிறைவு பெறும்.

          

தொடர்ந்து நாளை 22-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் தொடங்​கும். 23-ந் தேதி 2022-23-ம் ஆண்டு மிகைச் செல​வுக்​கான மானியக் கோரிக்​கை, அவைக்கு அளிக்​கப்​படும். அதற்​கான நிதி ஒதுக்க சட்ட மசோதா அறி​முகம் செய்​யப்​பட்​டு, விவாதமின்றி நிறை​வேற்​றப்​படும்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீது விவாதம் தொடர்ந்து நடை​பெறும். இறு​தி​நாளான ஜன.24-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதத்​துக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பதிலளிப்​பார். இதுத​விர, பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​படும் மசோ​தாக்​கள் நிறை​வேற்​றப்​படும்.

ஆளுநர் அவை​யில் பேசும்​போது மைக் அணைக்​கப்​பட்டதாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். அதில் தவறு நடை​பெற​வில்​லை. ஆளுநர் அரசு தயா​ரித்து அளித்த உரையை மட்​டுமே வாசித்​திருக்க வேண்​டும். உரைக்​கான ஒப்​புதலை அவரிடம் ஏற்​கெனவே பெறப்​பட்ட நிலை​யில், அவை மரபுக்கு எதி​ராக பேசப்​படும் வார்த்​தைகள் அவைக்​குறிப்​பில் இருக்​காது.

ஆளுநர் அரசைப் பற்றி பேசுவது எப்​படி? அவர் அரசி​யல்​வா​தி​யல்ல. அவரது பணி​யைத் தாண்டி பேசுவதை அனு​ம​திக்க முடி​யாது. அப்​படிப்​பட்ட பேச்சு வந்​த​தால் நான் எழுந்​து, மைக் எடுத்து பேசினேன்.நான் பேசுவதை மற்​றவர்​கள் கேட்​கும் வகை​யில் மற்ற மைக் நிறுத்​தப்​படும். அந்த வகை​யில் ஆளுநர் மைக் அணைக்​கப்​பட்டு இருக்​கலாம்.

அதே​போல் அவர் பேசும்​போது எனக்​கான மைக் அணைக்​கப்​படும். நான் பேசும்​போது, உங்​கள் கடமையை மட்​டும் செய்​யுங்​கள் என்​று​தான் கூறினேன். அநாகரி​க​மாக நான் பேச​வில்​லை. நாடாளு​மன்​றத்​தில் ஜனா​திபதி உரையை இப்​படி மாற்றி பேச முடி​யு​மா? துணை ஜனா​திப​தி​யாக இருந்த தன்​கரின் நிலை என்ன ஆனது? அவர் என்ன குற்​றம் செய்​தார்?

சட்​டப்​பேர​வை​யில் தேசிய கீதம் தொடர்​பான மரபு ஒரு​போதும் மாற்​றப்​ப​டாது. முதலில் தமிழ்த்​தாய் வாழ்த்​தும், நிறை​வாக தேசிய கீத​மும் பாடப்​படும். இந்த மரபு​தான் தொடரும். யாருக்​கும் அரசு பயப்​ப​டாது. இவ்​​வாறு அவர் தெரிவித்​​தார்​.

SCROLL FOR NEXT