தமிழகம்

புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு

செய்திப்பிரிவு

மதுரை: பு​திய தமிழகம் கட்​சி​யின் 7-வது மாநில மாநாடு ‘2026-பு​திய தமிழகம் வெல்​லும்’ எனும் தலைப்​பில் மதுரை​யில் நேற்று நடை​பெற்​றது.

கட்​சி​யின் நிறு​வனத் தலை​வர் க.கிருஷ்ணசாமி தலை​மை​யில் நடை​பெற்ற இந்த மாநாட்​டில், தேவேந்​திர குல வேளாளர் அரசாணை பெற்​றுத் தந்த நாயகருக்கு நன்றி தெரிவிக்​கப்​பட்​டது.

தேவேந்​திர குல வேளாளர்​கள் என்ற புதிய பட்​டியலை உரு​வாக்​கி, அம்​மக்​களின் தற்​போதைய மக்​கள் தொகைக்கு ஏற்ப 7.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும். கூட்​டணி பலம் என்ற போர்​வை​யில் கட்​டமைக்​கப்​பட்​டுள்ள, போலி​யான சமூகநீதி திரா​விட மாடல் ஆட்​சியை அகற்ற, தமிழக மக்​களும், அந்த எண்​ணத்​துடன் உள்ள பிற அரசி​யல் கட்​சிகளும் ஓரணி​யில் திரள வேண்​டும்.

குறைந்​த​பட்ச திட்ட அம்​சங்​களோடு, அமைச்​சர​வை​யில் பங்கு வழங்​கும் கூட்​டணி ஆட்சி மலர வேண்​டும். இதற்​காக அனைத்து மக்​களும், அரசி​யல் கட்​சிகளும் ஒன்​று​பட்டு நிற்க வேண்​டும். இதுவே 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் புதிய தமிழகம் கட்​சி​யின் கொள்கை நிலைப்​பாடு. ஆணவப் படு​கொலைகளுக்கு திரா​விடக் கொள்​கை​வா​தி​களே பொறுப்​பேற்க வேண்​டும். காசுக்கு வாக்​களிக்​கும் கலாச்​சா​ரத்தை ஒழிக்க வேண்​டும்.

உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​வுப்​படி, திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் உள்​ளிட்ட 36 தீர்​மானங்​கள் மா​நாட்​டில்​ நிறைவேற்​றப்​பட்​டன.

SCROLL FOR NEXT