தமிழகம்

டாஸ்மாக் கடைகளில் 54 புதிய பிராண்ட் மதுவகைகளை விரைவில் அறிமுகப்படுத்த முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: ​டாஸ்​மாக் கடைகளில் மது​பானங்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கும் வகை​யில் 54 புதிய உயர் ரக மது​பானங்​களை பிற மாநிலங்​களில் இருந்து இறக்​குமதி செய்​வதற்​கான திட்​டத்தை டாஸ்​மாக் நிர்​வாகம் வகுத்​துள்​ளது.

தமிழகத்​தில் மதுப்பிரியர்​கள் மற்​றும் சுற்​றுலாப் பயணி​களின் கோரிக்​கையை ஏற்று தரமான மது​வகைகளை விற்​பனை செய்ய முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​காக பிற மாநில​ங்களில் இருந்து உயர் ரக மது​பானங்​களை இறக்​குமதி செய்து விற்​ப​தற்​கான வழி​காட்​டு​தல்​கள் மற்​றும் அனு​ம​தி​களை வழங்​கும் நடவடிக்​கை​களை டாஸ்​மாக் நிர்​வாகம் தீவிரப்​படுத்தி வரு​கிறது.

இதுகுறித்து டாஸ்​மாக் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, ‘‘டாஸ்​மாக் விற்​பனை நிலை​யங்​களில் பிற மாநிலங்​களில் இருந்து வெளி​நாட்டு மது​பானங்​களை அறி​முகப்​படுத்​து​வதற்​கான ஆலோ​சனை​களில் ஈடு​பட்டு வரு​கின்​றோம். இதன்​மூலம் தமிழகத்​தில் இது​வரை கிடைக்​காத பல்​வேறு பிராண்ட் பீர் மற்​றும் மது​பான வகைகள் கிடைக்​கும். தற்​போது 100 பிராண்ட்​கள் விற்​பனை செய்​யப்​பட்டு வரு​கிறது. இருப்​பினும் அதில் சில மட்​டுமே வாடிக்​கை​யாளர்​களுக்கு பிடித்​தவை​யாக இருக்​கின்​றன.

நுகர்​வோரின் விருப்​பத்​தின்​படி 54 புதிய உயர் ரக பிராண்ட் மது​வகைகளை அறி​முகம் செய்ய திட்​ட​மிட்டு வரு​கிறோம். இதற்​கான இறுதி ஒப்​புதல் பட்​டியல் விரை​வில்​ வெளி​யிடப்​படும்​’’ என்​றார்​.

SCROLL FOR NEXT