தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்

 
தமிழகம்

கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல் தவறுகளை கண்டறிந்து சரி செய்யுங்கள்: தவெக அரசுக்கு தமிழிசை அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்​தாமல், தவறுகளை கண்​டறிந்து சரி செய்ய வேண்​டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார்.

சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தின் ஊரக வேலை​வாய்ப்​புத் திட்​டத்​துக்​காகப் பிரதமர் நரேந்​திர மோடி 7,500 கோடி ரூபாயை ஒதுக்​கி​யுள்​ளார். இது தவிர, கூவம் மற்​றும் பக்​கிங்​காம் கால்​வாயைச் சுத்​தம் செய்ய மத்​திய அரசு நிதி வழங்​கி​யுள்​ளது மகிழ்ச்சி அளிக்​கிறது. மழைக்​காலங்​களில் பக்​கிங்​காம் கால்​வாய் நிரம்பி குடி​யிருப்​புப் பகு​தி​களில் தண்​ணீர் புகுந்து மக்​கள் அவதி​யுற்​றனர்.

தற்​போது நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ள​தால் இந்​தப் பாதிப்பு குறை​யும். தமிழகத்​துக்​குத் தேவை​யான அனைத்து உதவி​களை​யும் மத்​திய அரசு செய்து வரும் நிலை​யில், கடந்த காலங்​களில், மத்​திய அரசு தமிழகத்தை வஞ்​சிப்​பது போன்ற ஒரு மாயத் தோற்​றத்தை உரு​வாக்​கி​னார்​கள்.

அரசு மருத்​து​வர்​கள் பணி நேரத்​தில் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை அளிக்​கக் கூடாது என்ற தமிழக சுகா​தா​ரத்​துறை அமைச்​சரின் அறி​விப்பை நான் வரவேற்​கிறேன். கடந்த காலங்​களில் மருத்​து​வர்​கள் பற்​றாக்​குறை இருந்​த​தால் தனி​யார் சேவை தேவைப்​பட்​டது. ஆனால், தற்​போது போதிய எண்​ணிக்​கை​யில் மருத்​து​வர்​கள் உள்​ளனர். எனவே, அவர்​கள் அரசு மருத்​து​வ​மனை​களி​லேயே முழு நேர சேவையை வழங்க வேண்​டும். அதே வேளை​யில், கஸ்​தூரி​பாய் மருத்​து​வ​மனை உள்​ளிட்ட அரசு மருத்​து​வ​மனை​களில் அடிப்​படை வசதி​களை மேம்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தமிழகத்​தில் சட்​டம் - ஒழுங்​கைச் சீராகப் பராமரிக்க வேண்​டும். குறிப்​பாகக் கஞ்சா, போதைப்​பொருள் புழக்​கத்தை இரும்​புக்​கரம் கொண்டு ஒடுக்க வேண்​டும்.

தற்​போது அமைக்​கப்​பட்​டுள்ள ‘சிங்​கப்​பெண்’ அதிரடிப்​படை மூலம் பெண்களுக்கு எதிரான குற்​றங்​களைத் தீவிர​மாகக் கட்​டுப்​படுத்த வேண்​டும். சிஎம்​டிஏ அலு​வல​கத்​தில் வெறும் 15 நாட்​களில் 300-க்​கும் மேற்​பட்ட அனு​ம​தி​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. மின்​சா​ரத் துறை முறை​கேடு புகாரை ஒரு வாரம் தாமத​மாகவே சிபிசிஐடி​யிடம் ஒப்​படைத்​துள்​ளனர்.

இந்​தத் தாமதத்தின் பின்​னணி​யில் உள்​நோக்​கம் இருக்​கிற​தா? யாரை​யா​வது காப்​பாற்ற முயற்சி நடக்​கிறதா? என்​பதை அரசு விளக்க வேண்​டும். நடப்பு அரசு இன்​னும் அதிக கவனத்​துடன் செயல்பட வேண்​டும். எதற்​கெடுத்​தா​லும் கடந்த கால ஆட்​சி​யின் மீது பழி சுமத்​தாமல், தற்​போது நடக்​கும் தவறுகளைக் கண்​டறிந்து அவற்​றைச் சரி செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT