தமிழகம்

தமிழக அரசின் புதிய தலைமை காஜி உஸ்மான் முகயித்தின்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் தலைமை காஜி​யாக (சன்னி பிரிவு) என்​.பி.உஸ்​மான் முக​யித்​தின் நியமிக்கப்​பட்​டுள்​ளார்.

இதுகுறித்து சிறு​பான்​மை​யினர் நல ஆணை​யர் வெளி​யிட்ட அறி​விப்​பில், ‘தமிழக அரசால் காஜி சட்​டம் பிரிவு–2-ன்கீழ் சென்னை மாவட்ட காஜி​யாக (சன்னி பிரிவு) என்​.பி. உஸ்​மான் முக​யித்​தின் கடந்த அக்​.17 முதல் 3 ஆண்​டுகளுக்கு நியமிக்​கப்​பட்​டுள்​ளார்’ என கூறப்​பட்​டுள்​ளது.

இதைத் தொடர்ந்​து, முதல்​வர் ஸ்டா​லின், அமைச்​சர் உள்​ளிட்​டோருக்கு அவர் நன்றி தெரி​வித்​துள்​ளார்.

சென்னை மாவட்ட காஜி​யாக நியமிக்​கப்​படு​பவர், தமிழக அரசின் தலைமை காஜி​யாக கருதப்​படு​கிறார். தற்​போது தலைமை காஜி​யாக நியமி்க்​கப்​பட்​டுள்ள என்​.பி.உஸ்​மான் முக​யித்​தின், வேலூர் ஜாமியா அல்​-​பாகியாத் ஸாலிஹாத் மதரஸா​வின் முன்​னாள் முதல்​வர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT