தமிழகம்

முதல்வரின் சிறப்பு மதிப்பெண்கள் அறிவிப்பு: பகுதிநேர ஆசிரியர் போராட்டம் தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​முதல்​வரின் அறி​விப்பை ஏற்று சென்​னை​யில் கடந்த 17 நாட்​களாக நடை​பெற்று வந்த போராட்​டத்தை தற்​காலிக​மாக தள்​ளிவைப்​ப​தாக பகு​திநேர ஆசிரியர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை சமாளிக்க பகு​திநேர ஆசிரியர்​கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்​பூ​தி​யத்​தில் பணி நியமனம் செய்​யப்​படு​கின்​றனர். அதன்​படி தற்​போது 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​திநேர ஆசிரியர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர். இவர்​கள் பள்​ளி​களில் வாரந்​தோறும் 3 நாட்​கள் பாடம் நடத்​து​வார்​கள். அதற்கு ரூ.12,500 மாத சம்​பள​மாக தரப்​படு​கிறது.

          

இதற்​கிடையே பணி நிரந்​தரம் செய்ய வலி​யுறுத்தி, பகு​திநேர ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டுக் குழு சார்​பில் கடந்த ஜன.6ம் தேதி முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்​டது. இதற்​கிடையே போராட்​டத்​தின்​ போது, பெரம்​பலூரைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் தற்​கொலைக்கு முயன்​ற​தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்​தார்.

அதன்​பின் பகு​தி நேர ஆசிரியர் சங்க நிர்​வாகி​களு​டன் பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேச்​சு​வார்த்தை நடத்தினர். அப்​போது பகு​திநேர ஆசிரியர்​களுக்​கான மாத ஊதியம் ரூ.15 ஆயிர​மாக உயர்த்​தப்​படும் என்பன உட்பட சில அறி​விப்பு​களை வெளி​யிட்​டார். ஆனாலும் போராட்​டம் தொடர்ந்தது.

இந்​நிலை​யில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு நியமன தேர்​வில் சிறப்பு மதிப்​பெண் வழங்கப்​படும் என்று முதல்​வர் ஸ்​டா​லின் சட்டப்​பேர​வை​யில் நேற்று அறி​வித்​தார். இதையேற்று போராட்டத்தை தற்​காலிக​மாக தள்​ளிவைப்​ப​தாக கூட்​டுக்​குழு அறி​வித்​தது. அதே ​நேரம் பணி நிரந்​தரம் செய்​யும் வரை போராட்டம் தொடரும் என மற்​றொரு கூட்​டமைப்​பினர் தெரிவித்துள்​ளனர்.

அதே​போல், சம வேலைக்கு சம ஊதி​யம் என்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்​கம் சார்​பில் சென்னை கோட்டை ரயில் நிலை​யம் அரு​கில் 30-வது நாளாக நேற்றும் போ​ராட்​டம் நடை​பெற்​றது. அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். நிரந்​தரத் தீர்வு காணும் வரை இந்​தப் போராட்டம் தொடரும் என அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT