தமிழகம்

பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழகம்: தமிழக அரசின் சாதனை பட்டியல்

செய்திப்பிரிவு

சென்னை: பொருளா​தார வளர்ச்​சி​யில் தமி​ழ​கம் முதன்மை மாநில​மாக விளங்​கு​வ​தாக ஆளுநர் உரை​யில் தமிழக அரசின் சாதனை​கள் பட்​டியலிடப்​பட்​டுள்​ளன.

இது தொடர்​பாக ஆளுநர் உரை​யில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: தமி​ழ​கம் கடந்த நிதி​யாண்​டில் 11.9 சதவீதம் பொருளா​தார வளர்ச்​சியை எட்​டி, இந்​தி​யா​விலேயே முதன்மை மாநில​மாக உரு​வெடுத்​துள்​ளது. இது கடந்த 14 ஆண்​டு​களில் இல்​லாத சாதனை​யாகும். பொங்​கல் திரு​நாளை​யொட்டி 2.23 கோடி குடும்​பங்​களுக்கு தலா ரூ.3,000 ரொக்​கம் உள்​ளிட்ட ரூ.6,936 கோடி மதிப்​பிலான பரிசுத் தொகுப்​பு​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

          

தடுப்​பூசி செலுத்​துதல், ஆக்​சிஜன் மற்​றும் கூடு​தல் படுக்கை வசதி​களை உறுதி செய்​தல் போன்ற போர்க்​கால நடவடிக்​கை​களால், தமி​ழ​கம் கரோனா பிடியி​லிருந்து வெற்​றிகர​மாக மீட்​கப்​பட்​டது. இந்​தச் சாதனை வரலாற்​றில் என்​றும் நிலைத்​திருக்​கும். ‘மகளிர் விடியல் பயணம்’ மூலம் பெண்​கள் மாதம் ரூ.888 வரை சேமிக்​கின்​ற​னர். சுமார் 1.30 கோடி பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க இது​வரை ரூ.33,464 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

உயர்​கல்​வியைத் தொடரும் மாணவி​களுக்கு மூவலூர் ராமாமிர்​தம் அம்​மை​யார் புது​மைப் பெண் திட்​டத்​தின் மூலம் மாதந்​தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது. நகரங்​களுக்கு வரும் பெண்​கள் நவீன வசதி​களு​டன் நியாய​மான கட்​ட​ணத்​தில் பாது​காப்​பான தங்​கும் வசதி​யைப் பெற 19 தோழி விடு​தி​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இதன் மூலம் இந்​தி​யா​விலேயே தொழிற்​சாலை​களில் பணி​புரி​யும் பெண் ஊழியர்​களை அதி​க​மாகக் கொண்ட (40.3 சதவீதம்) மாநில​மாக தமி​ழ​கம் திகழ்​கிறது.

கடந்த 5 ஆண்​டு​களில், தமி​ழ​கத்​தில் உள்ள 4.9 லட்​சம் ஊரக மற்​றும் நகர்ப்​புற சுய உதவிக் குழுக்​களுக்கு ரூ.1.34 லட்​சம் கோடி வங்​கிக் கடன் வழங்​கப்​பட்​டு, பெண்​களின் பொருளா​தா​ரச் சுதந்​திரம் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் பள்ளி மாண​வர்​களின் ஊட்​டச்​சத்து மற்​றும் வரு​கையை உறுதி செய்​யும் வகை​யில், 19.34 லட்​சம் குழந்​தைகள் முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்​தின் மூலம் பயனடைந்து வரு​கின்​ற​னர்.

அயோத்​தி​தாசப் பண்​டிதர் மற்​றும் தொல்​குடி திட்​டங்​களின் கீழ், ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் வசிக்​கும் பகு​தி​களில் தலா ரூ.1000 கோடி மதிப்​பிலான உட்​கட்​டமைப்பு வசதி​கள் உரு​வாக்​கப்​படு​கின்​றன. அம்​பேத்​கர் அயலக கல்​வித் திட்ட நிதி ரூ.36 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டு, 385 மாண​வர்​கள் வெளி​நாடு​களில் பயின்று வரு​கின்​ற​னர். ‘காலனி’ என்ற சொல் ஆவணங்​களி​லிருந்து நீக்​கப்​பட்​டுள்​ளது. நன்​னிலம் மகளிர் நில​வுடைமை திட்​டத்​தின் மூலம் 1,026 ஆதி​தி​ரா​விடப் பெண்​களுக்கு ரூ.50 கோடி மானி​யம் அளிக்​கப்​பட்​டு, அவர்​கள் நில உடைமை​யாளர்​களாக மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

27.55 லட்​சம் முதி​யோர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு ரேஷன் பொருட்​கள் வீடு​களுக்கே சென்று வழங்​கப்​படு​கின்​றன. ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மக்​களின் சமூகப் பொருளா​தார நிலையை உயர்த்த இது​வரை 3 லட்​சம் இலவச வீட்​டுமனை இணை​ய​வழி பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. மேலும் போதைப் பொருட்​கள் இல்​லாத தமிழ்​நாடு இயக்​கம் மற்​றும் இளைஞர்​களுக்​கான அறவுணர்​வுப் பயிலரங்​கங்​கள் மூலம் தமி​ழ​கத்​தின் எதிர்​காலம் உறுதி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT