புதுடெல்லி: ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தின்போது, ஆகம விதிகளை பின்பற்றக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
ஆகமக் கோயில்களை கண்டறிய மயிலம் பொம்மபுர ஆதீனத்தை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்நிலையில், ஆகம விதிகள் பின்பற்றப்படாத கோயில்களைக் கண்டறிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மேலும் 4 மாதம் உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.