சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. | படம்: ம.பிரபு |

 
தமிழகம்

சென்னை, புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த மழையால்: தணிந்தது வெப்பம்

செய்திப்பிரிவு

சென்னை: நள்​ளிரவு மற்​றும் காலை​யில் சென்​னை, புறநகரில் பெய்த திடீர் மழையால் வெப்​பம் தணிந்து குளிர்ந்த சூழல் நில​வியது. சென்​னை, புறநகரில் கடந்த இரு வாரங்​களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்​தது.

இதன் காரண​மாக பகல் மற்​றும் இரவு நேரங்​களில் கடும் புழுக்​கம் நில​வியது. கடந்த சில தினங்​களாக சென்​னை​யில் 100 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவுக்கு மேல் வெப்​பநிலை பதி​வாகி வந்​தது.

இதனால் பொது​மக்​கள் பகல் நேரங்​களில் வெளி​யில் செல்ல முடி​யாமலும், இரவில் புழுக்​கத்​தால் தூங்க முடி​யாமலும் அவதிப்​பட்டு வந்​தனர். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் நள்​ளிரவு மற்​றும் நேற்று காலை​ சென்​னை, புறநகர் பகு​தி​களில் பலத்த காற்​று, இடி, மின்​னலுடன் கூடிய திடீர் மழை பெய்​தது.

இதனால் நேற்று மாநகர், புறநகரில் வெப்​பம் தணிந்து ரம்​மிய​மான குளிர்ந்த சூழல் நில​வியது.

நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக புறநகர் பகு​தி​யான முகலி​வாக்​கம், சென்னை ஆர்​.ஏ.புரம், சைதாப்​பேட்டை உள்​ளிட்ட இடங்​களில் தலா 1 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது.

வரும் நாட்​களி​லும் சென்​னை, புறநகர் பகு​தி​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT