தமிழகம்

நீட் தேர்வை முன்னிட்டு மாணவர்களின் வசதிக்காக ஜூன் 21-ல் வார நாட்கள் அட்டவணைப்படி புறநகர் ரயில் சேவை

செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வை முன்​னிட்​டு, மாணவர்​களின் வசதிக்​காக, வரும் 21-ம் தேதி​யன்று வார​நாட்​கள் கால அட்​ட​வணைப்படி புறநகர் ரயில்​கள் இயக்​கப்​படும் என்​று, சென்னை ரயில்வே கோட்​டம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்​டம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தேசிய தகுதி மற்​றும் நுழைவுத் தேர்வு வரும் ஞாயிற்​றுக்​கிழமை ( 21-ம் தேதி) நடை​பெறவுள்​ளது. தேர்வு எழுதச் செல்​லும் மாணவ - மாணவி​கள் எளி​தாகப் பயணம் செய்​வதற்​காக, தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டம் முக்​கிய ஏற்​பாடு​களைச் செய்​துள்​ளது.

அன்​றைய தினம் ஞாயிற்​றுக்​கிழமை என்ற போதி​லும், வழக்​க​மான வார​நாட்​களில் இயக்​கப்​படு​வது போன்ற அட்​ட​வனைப்​படி புறநகர் ரயில் சேவை​கள் இயக்​கப்​படும்​.மேலும், முக்​கிய ரயில் நிலை​யங்​களில் சிறப்பு நீட் உதவி மையங்​களும் அமைக்​கப்​பட​வுள்​ளன.

அரக்​கோணம் ரயில் நிலை​யத்​தில் தற்​போது நடை​பெறும் பொறி​யியல் மேம்​பாட்​டுப் பணி​கள் காரண​மாக, சென்னை சென்ட்​ரல், கடற்​கரை - அரக்​கோணம் - திருத்​தணி வழித்​தடத்​தில் மட்​டும் புறநகர் ரயில்​கள் தற்​போதுள்ள அட்​ட​வணை​யின்​படி இயக்​கப்​படும்.

அதே​போல, சென்னை கடற்​கரை - தாம்​பரம் வழித்​தடத்​தில் இயக்​கப்​படும் குளிரூட்​டப்​பட்ட (ஏசி) புறநகர் ரயில்​களும் ஞாயிற்​றுக்​கிழமை அட்​ட​வணைப்​படியே இயக்​கப்​படும். இவைத​விர, மற்ற அனைத்து சென்னை புறநகர் வழித்​தடங்​களி​லும் வார​நாட்​களுக்​கான கால அட்​ட​வணை பின்​பற்​றப்​படும்.

தேர்வு எழுதச் செல்​லும் மாணவ - மாணவி​கள் மற்​றும் அவர்​களு​டன் வரும் பெற்​றோர்​களுக்​குத் தேவை​யான வழி​காட்​டு​தல்​களை வழங்க சென்ட்​ரல், எழும்​பூர், தாம்​பரம், பெரம்​பூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், ஆவடி, திரு​வள்​ளூர் மற்​றும் காட்​பாடி ஆகிய 9 முக்​கிய ரயில் நிலை​யங்​களில் பிரத்​யேக நீட் உதவி மையங்​கள் அமைக்​கப்​பட​வுள்​ளன.

இந்த உதவி மையங்​கள் மூலம் ரயில்​களின் விவரங்​கள், உள்​ளூர் போக்​கு​வரத்து வசதி​கள் மற்​றும் தேர்வு மையங்​களுக்​குச் செல்​வதற்​கான வழிகள் குறித்த தகவல்​கள் பயணி​களுக்கு வழங்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT