ஹரீஷ்

 
தமிழகம்

திருவேற்காடு அருகே தனியார் பள்ளியில் குத்துச்சண்டை போட்டியில் மாணவர் மூளைச் சாவு: உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்

செய்திப்பிரிவு

பூந்தமல்லி: அயனம்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் நடந்த மாநில அளவி​லான குத்​துச்​சண்டை போட்​டி​யின்​போது 15 வயது மாணவர் மூளைச் சாவு அடைந்​தார். அம்​மாணவரின் உடல் உறுப்​பு​களை அவரது பெற்​றோர் தானம் செய்​துள்​ளது அனை​வரை​யும் நெகிழச் செய்​துள்​ளது.

கேரள மாநிலத்​தைச் சேர்ந்​தவர் சந்​திர​பாபு(45). இவர் செங்​கல்​பட்டு மாவட்​டம், பெருங்​களத்​தூரில் உள்ள தனி​யார் மென்​பொருள் நிறு​வனத்​தில் பொறி​யாள​ராக பணிபுரிந்து வரு​கிறார்.

இவரது மனைவி ரேஷ்மி(41). சென்​னை, அம்​பத்​தூரில் ஆசிரியர் குடி​யிருப்​பில் வசித்து வரும் இத்​தம்​ப​தி​யின் மகன் ஹரீஷ் (15) சூரப்​பட்டு பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 10-ம் வகுப்பு படித்து வந்​தார்.

திரு​வேற்​காடு அருகே அயனம்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்ளி வளாகத்​தில் கடந்த வாரம் நடை​பெற்ற மாநில அளவி​லான குத்​துச்​சண்டை போட்​டி​யில் பங்​கேற்ற ஹரீஷ், இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

கடந்த 12-ம் தேதி அப்​பள்ளி வளாகத்​தில் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் பங்​கேற்ற ஹரீஷ் திடீரென மயங்கி விழுந்​தார். அதிர்ச்​சி​யடைந்த ஆசிரியர்​கள் ஹரிஷை மீட்​டு, அயனம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்த்​தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஹரீஷ் நேற்று முன்​தினம் இரவு மூளைச் சாவு அடைந்​தார்.

இதையடுத்து ஹரிஷின் பெற்​றோர், தங்​கள் மகனின் உடல் உறுப்​பு​களை தானம்​செய்ய விரும்​புவ​தாக மருத்​து​வ​மனை நிர்​வாகத்​திடம் தெரி​வித்​தனர்.

தொடர்ந்து ஹரிஷின் கண், இருத​யம், கணை​யம், சிறுநீரகங்​கள், குடல் உள்​ளிட்ட 7 உறுப்​பு​களை நேற்று தனி​யார் மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் எடுத்​து, மாற்று நபர்​களுக்கு பொருத்​தும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

பிறகு ஹரிஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்​படுத்​தப்​பட்டு பெற்​றோரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. இதுகுறித்து திருவேற்காடு போலீ​ஸார் வழக்​குப் பதிவுசெய்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT