தமிழகம்

எப்.சி. கட்டண உயர்வை நிறுத்திவைக்க உத்தரவு: மாநில அளவிலான லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

செய்திப்பிரிவு

நாமக்கல்: தமிழ்​நாடு மாநில லாரி உரிமை​யாளர்​கள் சம்​மேளன தலை​வர் தனராஜ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய சாலைப் போக்​கு​வரத்து அமைச்​சகம், இருசக்கர வாக​னம், கார், லாரி​கள் உள்​ளிட்ட அனைத்து வாக​னங்​களுக்​கும் டிச. 17 முதல் தகு​திச் சான்​றிதழ் கட்​ட​ணத்தை (எப்​.சி.) உயர்த்தி அறி​வித்​தது.

வாக​னத்​தின் தயாரிப்பு ஆண்டை அடிப்​படை​யாக கொண்டு எப்.சி. கட்​ட​ணம் பல மடங்கு உயர்த்​தப்​பட்​டது. பல மாநிலங்​கள் கட்டண உயர்வை நிறுத்தி வைத்​துள்ள நிலை​யில், தமிழகத்​தி​லும் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்​டும் என்று முதல்​வர், அமைச்​சர்​கள் மற்​றும் அதி​காரி​களிடம் வேண்​டு​கோள் விடுத்​தோம்.

          

எங்​கள் கோரிக்கை ஏற்​கப்​பட​வில்​லை. உயர்த்​தப்​பட்ட கட்​ட​ணத்தை செலுத்தி எப்​.சி. பெற முடி​யாமல் மாநிலம் முழு​வதும் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட லாரி​கள் ஆங்​காங்கு நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த நிலை​யில், கடந்த 17-ம் தேதி நாமக்​கல்​லில் நடை​பெற்ற சம்​மேளன செயற்​குழுக் கூட்​டத்​தில், தமிழகத்​தில் எப்​.சி. கட்டண உயர்வை திரும்​பப் பெறக்​கோரி பிப். 25 முதல் மாநிலம் முழு​வதும் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டம் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

லாரி​கள் வேலைநிறுத்​தப் போராட்​டம் அறிவிக்​கப்​பட்ட 8 மணி நேரத்​தில், 3 மாதங்​களுக்கு எப்​.சி.க்கு புதிய கட்​ட​ணம் வசூலிப்​பதை தற்​காலி​மாக நிறுத்​தி​வைத்​து, பழைய கட்​ட​ண​மான ரூ.800 மட்​டும் செலுத்தி லாரி​களுக்கு எப்​.சி. சான்று பெறலாம் என்று தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

மேலும், போக்​கு​வரத்து ஆணை​யர் மற்​றும் சம்​மேளன நிர்​வாகி​கள் அடங்​கிய குழு ஏற்​கெனவே அமைக்​கப்​பட்​டுள்​ள​தால், அக்​குழு​வின் கூட்​டத்​தில் 3 மாதத்​தில் எப்​.சி. கட்​ட​ணம் நிர்​ண​யிப்​பது தொடர்​பாக பேசி முடிவு செய்​ய​லாம் என்​றும் மாநில போக்​கு​வரத்து ஆணை​யர் உறு​தி​யளித்​துள்​ளார்.

எனவே, வரும் 25-ம் தேதி முதல் நடை​பெற​விருந்த லாரி​கள் வேலைநிறுத்​தப் போராட்​டம் தள்ளி வைக்​கப்​படு​கிறது. லாரி​கள் வழக்​கம்​போல இயங்​கும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT