பொங்கலன்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரர்.

 
தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை​யில் அவனி​யாபுரம், பாலமேடு ஜல்​லிக்​கட்டு நிறைவடைந்த நிலை​யில் இன்று காலை 7.30 மணி​யள​வில் அலங்​காநல்​லூர் ஜல்​லிக்​கட்டு போட்டி நடை​பெறுகிறது.

உச்ச நீதி​மன்ற வழி​காட்​டு​தலோடு, அரசு சார்​பில் நடத்​தப்​படும் இப்​போட்​டியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்​கிறார். ஏற்​பாடு​களை அமைச்​சர் பி.மூர்த்தி தலை​மை​யில், அலங்​காநல்​லூர் ஜல்​லிக்​கட்டு விழாக் குழு​வினர் செய்து வரு​கின்​றனர்.

இதில் பங்​கேற்க தமிழகம் முழு​வதும் இருந்து 6,500 காளை​கள் பதிவு செய்​யப்​பட்​டிருந்​தன. அதில் சிறந்த 1,100 காளை​களுக்கு போட்​டி​யில் பங்​கேற்க டோக்​கன் வழங்​கப்​பட்​டுள்​ளது. 600 மாடு​பிடி வீரர்​கள் களம் இறங்​கு​கின்​றனர்.

இதைப் பார்ப்​ப​தற்​காக உலகின் பல்​வேறு பகு​தி​களைச் சேர்ந்த சுற்​றுலாப் பயணி​கள், தமிழ்​நாடு சுற்​றுலாத் துறை மூலம் பதிவு செய்​துள்​ளனர்.தென் மண்டல ஐ.ஜி. மற்​றும் மதுரை காவல் கண்​காணிப்​பாளர் தலை​மை​யில் 3 ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​களில் ஈடு​படு​கின்​றனர்.

போட்​டி​யில் அதிக காளை​களை அடக்​கும் சிறந்த வீரருக்கு சுமார் ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள சொகுசு காரும், சிறந்த காளை​யின் உரிமை​யாள​ருக்கு டிராக்​டரும் பரி​சாக வழங்​கப்​படு​கிறது. 2-ம் பரிசு பெறும் மாடு​பிடி வீரர், காளை​களுக்கு பைக்​கு​களும் பரி​சாக வழங்​கப்பட உள்​ளன.

ஒவ்​வொரு சுற்​றி​லும் வெற்​றி​பெறும் காளைக்​கும், காளை​களை அடக்​கும் வீரர்​களுக்​கும் ஸ்கூட்​டர், பசு கன்​று, பீரோ, டிவி, சைக்​கிள்​கள், தங்க நாண​யங்​கள், மெத்​தை, கட்​டில் உள்​ளிட்ட ரூ.2 கோடிக்கு மேலான பரிசுப் பொருட்​கள் வழங்​கப்​படு​கின்​றன. இந்த ஆண்டு முதல் முறை​யாக அதிக காளை​களைஅடக்​கும் முதல் 3 வீரர்​களுக்குரூ.3 லட்​சம், ரூ.2 லட்​சம், ரூ.1 லட்​சம் என ரொக்​கப் பரிசுகளும் வழங்​கப்பட உள்​ளன.

SCROLL FOR NEXT