தமிழகம்

இலங்கை பெண்ணுக்கு தமிழகத்தில் வாக்குரிமை: நீக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அமலாக்கத் துறை கடிதம்

செய்திப்பிரிவு

சென்னை: விடு​தலைப் புலிகள் இயக்​கத்​துக்கு பணம் அனுப்பிய வழக்கில் சிக்​கிய, இலங்கை பெண்ணுக்கு தமிழகத்​தில் சட்​ட​விரோத வாக்​குரிமை இருப்​பதை கண்​டறிந்த அமலாக்​கத் துறை, வாக்காளர் பட்​டியலில் இருந்து அவரது பெயரை நீக்கக் கோரி தேர்​தல் ஆணை​யத்​துக்கு கடிதம் அனுப்பி உள்​ளது.

இலங்​கையைச் சேர்ந்​தவர் மேரி பிரான்​சிஸ்கா லட்​சுமணன் (53). இவர், போலி பாஸ்​போர்ட் பயன்​படுத்தி சென்னை விமான நிலை​யத்​தில் இருந்து பெங்​களூரு செல்ல முயன்​ற​போது 2021-ல் தமிழக ‘கியூ’ பிரிவு போலீஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார். அதன்​பின், அவரது நண்​பர்​கள் மூவரும் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இவர்​களின் பின்​னணி​யில், டென்​மார்க்​கில் பதுங்கி இருக்கும், விடு​தலைப்​புலிகள் அமைப்​பைச் சேர்ந்த உமா​காந்​தன் இருப்பது தெரிய​வந்​தது. இதனால், என்​ஐஏ அவர்​களை கைது செய்​து, காவலில் எடுத்து விசா​ரித்​தது. அப்​போது, மும்​பை​யில் உள்ள வங்​கிக்​கணக்​கில் இருந்​து, விடு​தலைப் புலிகள் அமைப்பை சேர்ந்​தவருக்​கு, மேரி பிரான்​சிகா லட்​சுமணன், லட்​சக்​கணக்​கில் பணம் அனுப்​பியதும், அதற்கு இவரின் நண்​பர்​கள் உடந்​தை​யாக இருந்​ததும் தெரிய​வந்தது.

இதையடுத்​து, சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடுப்பு சட்​டத்தின் கீழ் இந்த வழக்கை அமலாக்​கத்​துறை கையில் எடுத்து விசா​ரணை நடத்தி வந்​தது. அமலாக்​கத் ​துறை விசா​ரணை​யில், மேரி பிரான்​சிஸ்கா 2019-ல் இலங்​கை​யில் இருந்து சுற்​றுலா விசா​வில் இந்​தியா வந்​தத தெரிந்தது. விசா காலம் முடிந்​தும், அவர் இலங்கை செல்​லாமல், சென்னை சாலிகி​ராமத்​தில் வீடு எடுத்து தங்கி வந்​துள்​ளார். வீட்டில் மின் இணைப்பு கட்டண ரசீது மூலம், வங்கி கணக்கு தொடங்​கி, அதன் மூலம் பான் கார்​டு, ஆதார் கார்​டு, வாக்​காளர் அட்​டையை பெற்​றுள்​ளார்.

இந்​நிலை​யில், தற்​போது எஸ்​ஐஆர் பணிமூலம், மேரி பிரான்​சிஸ்கா​வுக்கு இன்​ன​மும் வாக்கு அளிக்​கும் உரிமை இருப்​பதை அமலாக்​கத் ​துறை கண்​டறிந்​துள்​ளது. இதை குறிப்​பிட்​டு, அவரது வாக்கை நீக்​கு​மாறு மாநில தலைமை தேர்​தல் அதி​காரிக்கு தற்​போது அமலாக்​கத்​துறை கடிதம் அனுப்பி உள்​ளது.

SCROLL FOR NEXT