தமிழகம்

போலீஸார் குறித்து லஞ்ச புகார் தெரிவிக்க தமிழக காவல்துறையில் தனிப்பிரிவு தொடக்கம்: செல்போன் எண்களை வெளியிட்டார் டிஜிபி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காவல் துறை​யில் நேர்​மை, வெளிப்​படைத்​தன்மை மற்​றும் பொது​மக்​களின் நம்​பிக்​கையை மேலும் வலுப்​படுத்​தும் வகை​யில், அனைத்து மாவட்​டங்​கள் மற்​றும் மாநகர காவல் ஆணை​யரகங்​களி​லும் போலீஸார் குறித்து புகார் தெரிவிக்க ‘லஞ்ச ஒழிப்பு பிரிவை (Internal Vigilance Cells) உரு​வாக்கி டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

சென்னை பெருநகர காவல் துறை​யில் லஞ்​சத்தை ஒழிக்க ‘‘லஞ்ச ஒழிப்பு தனிப்​பிரிவை’’ ஆணை​யாளர் அமல்​ராஜ் கடந்த 11-ம் தேதி தொடங்கி வைத்​து, புகார்​களை தெரிவிக்க செல்​போன் எண்​ணை​யும் வெளி​யிட்​டார்.

இதற்கு பொது மக்​களிடையே நல்ல வரவேற்பு கிடைத்​தது. லஞ்​சம் கேட்​கும் போலீஸார் பற்றி இந்த எண்​ணில் மக்​கள் புகார் தெரி​வித்​தனர்.

போலீ​ஸாரும் தங்​களிடம் லஞ்​சம் கேட்​கும் அமைச்​சுப் பணி​யாளர்​கள் குறித்து இதில் புகார் தெரி​வித்​தனர். இந்த லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த வரவேற்பு காரண​மாக, தமிழகம் முழு​வதும் லஞ்ச ஒழிப்பு பிரிவை தொடங்க தமிழக காவல்​துறை முடிவு செய்​தது.

காவல்​துறை அதி​காரி​கள் மற்​றும் போலீ​ஸாரின் ஊழல், முறை​கேடு, அதி​கார துஷ்பிரயோகம் உள்​ளிட்ட ஒழுங்​கீன செயல்​களை தடுப்​பது, கண்​காணிப்​பது மற்​றும் அவை தொடர்​பான புகார்​களை விசா​ரிப்​பது இப்​பிரிவு​களின் முக்​கிய நோக்​க​மாகும்.

பொது​மக்​கள் எளி​தில் புகார் அளிக்​கும் வகை​யில், ஒவ்​வொரு மாவட்​டம் மற்​றும் மாநகரத்​துக்​கும் தனித்​தனி செல்​போன் மற்​றும் வாட்​ஸ்​அப் எண்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

காவல்​துறை​யினருக்கு எதி​ரான லஞ்​சம், முறை​கேடு, அதி​கார துஷ்பிரயோகம் உள்​ளிட்ட புகார்​களை பொது​மக்​கள் இந்த எண்​களில் தெரிவிக்​கலாம். புகார்​தா​ரர்​கள் மற்​றும் சாட்​சிகளின் அடை​யாளங்​கள் ரகசி​ய​மாக பாது​காக்​கப்​படும்.

புகார் அளித்​ததற்​காக எவ்​வித அச்​சுறுத்​தல், துன்​புறுத்​தல் அல்​லது பழி​வாங்​கும் நடவடிக்​கைக்​கும் அவர்​கள் ஆளாக​மாட்​டார்​கள். பெறப்​படும் புகார்​கள் நியாய​மான முறை​யில், பாரபட்​சமின்றி உரிய காலக்​கெடு​வுக்​குள் விசா​ரிக்​கப்​பட்​டு, தகுந்த நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் அறி​விப்​பில் தெரி​வித்​துள்​ளார்.

அதோடு, இந்த கண்​காணிப்பு பிரிவு​களின் செயல்​பாடு​கள் எஸ்பி முதல் டிஜிபி வரையி​லான உயர் அதி​காரி​களால் தொடர்ந்து கண்​காணிக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, பொது​மக்​கள் எவ்​வித அச்​ச​முமின்றி முன்​வந்து காவல்​துறை​யினரின் ஊழல் மற்​றும் முறை​கேடு​கள் குறித்த தகவல்​களை தெரிவிக்​கு​மாறு டிஜிபி வேண்​டு​கோள்​ விடுத்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT