சென்னை: பயணிகள் நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை எழும்பூர் - மேற்குவங்கம் மாநிலம் சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து ஏப்.19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் (06001) புறப்பட்டு, மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும்.
மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து ஏப்.20-ம் தேதி (திங்கள்கிழமை) இரவு 9.30 மணிக்கு சிறப்பு ரயில் (06002) புறப்பட்டு, புதன்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.