சென்னை: பாமக சட்டப்பேரவை குழு தலைவராக சவுமியா அன்புமணி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி வெற்றி பெற்றார். அதேபோல், செஞ்சியில் அ.கணேஷ் குமார், ஜெயங்கொண்டத்தில் க.வைத்திலிங்கம், விக்கிரவாண்டியில் சி.சிவக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், பாமக சட்டப்பேரவை குழு தலைவராக சவுமியா அன்புமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை கட்சியின் துணை தலைவராக செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினர் அ.கணேஷ்குமார், கொறடாவாக விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ச.சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.