மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, முதல்வர் விஜய்

 
தமிழகம்

கோவளத்தில் நாளை தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷாவைச் சந்திக்கிறார் விஜய்

செய்திப்பிரிவு

கோவளம்: மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டல முதல்​வர்​கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்​தில் நாளை ஆக.20-ம் தேதி நடை​பெறுகிறது.

நாட்​டில் அண்டை மாநிலங்​களுக்கு இடையே​யான உறவைச் சுமூக​மாக பேணும் வித​மாக மத்​திய அரசால் மாநில முதல்​வர்​கள் மாநாடு நடத்​தப்​படு​கிறது. அதன்​படி 31-வது தென் மண்டல முதல்​வர்​கள் மாநாடு, சென்​னையை அடுத்த கோவளத்​தில் உள்ள பிஷர்​மேன் கோவ் ஓட்​டலில் நாளை ஆக.20-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்கு மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தலைமை வகிக்​கிறார். இதில் தமிழகம், கேரளா, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, தெலங்​கானா மற்​றும் புதுச்​சேரி மாநிலங்​களின் முதல்​வர்​கள் மற்​றும் உயர​தி​காரி​கள் பங்​கேற்​கின்​றனர்.

இந்​தக் கூட்​டத்​தில் ஒவ்​வொரு மாநிலங்​களுக்கு இடையே​யான ஒத்​துழைப்​பு, பொருளா​தார வளர்ச்​சி, தொழில் முதலீடு​கள், கூட்​டுறவைப் பலப்​படுத்​து​வது, நீர்​வளப் பகிர்​வு, குற்​றங்​கள் தடுப்​பு, எல்​லைப் பிரச்சி​னை​கள் உட்பட பல்​வேறு முக்​கிய விவ​காரங்​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தப்பட உள்​ளது.

தற்​போது தொகுதி மறுவரையறை மேற்​கொள்​ளப்​பட்டால் தென் மாநிலங்​களின் பிர​தி​நி​தித்​து​வம் பாதிக்​கப்​படலாம் என்ற அச்​சம் நில​வு​கிறது. இந்​தச் சூழலில் மாநாட்​டில் எம்​.பி. தொகுதி மறு​வரையறை விவ​காரம் கூடு​தல் கவனம் பெறும் என தெரி​கிறது. மேலும், தற்​போது காவிரி நீர் பங்​கீடு விவ​காரத்​தில் கர்​நாடகா மற்​றும் தமிழகம் இடையே சிக்​கல் எழுந்​துள்ள நிலை​யில், இந்​தக் கூட்​டம் முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது.

இந்த மாநாட்​டின் போது தமிழக முதல்​வர் விஜய் மற்​றும் கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் ஆகியோர் தனி​யாகச் சந்​தித்து காவிரி விவ​காரம் குறித்து ஆலோ​சனை நடத்​தவுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

அதேபோல் விஜய் முதல்வரான பிறகு இதுவரை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவில்லை. பதவி ஏற்ற பின்னர் டெல்லிக்கு முதல் முறையாகச் சென்ற போதும், அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், மாநாட்டில் அமித் ஷாவுடனான இந்த முதல் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், தென் மாநிலங்களைப் பொறுத்த வரை ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றில் மட்டுமே பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதனால் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மாநாடு நிறைவு பெற்ற பின் மாலை​யில் 2 மாநிலங்​களின் முதல்​வர்​களும் சந்​திப்​பார்​கள் என்று கூறப்​படு​கிறது. ஏற்​கெனவே இந்த விவ​காரம் தொடர்​பாக முதல்​வர் விஜய் கர்​நாடகா செல்ல திட்​ட​மிட்​டிருந்​தார்.

ஆனால், விவ​சா​யிகள் மற்​றும் கன்னட அமைப்​பினர் போராட்​டம் நடத்தி வரு​வ​தால், தற்​போதைய சூழலில் விஜய் கர்​நாடகா வர வேண்​டாம் என்று கர்​நாடக முதல்​வர் சிவ​கு​மார் கேட்​டுக் கொண்​டார். அதனால் முதல்​வர் விஜய்​யின் கர்​நாடக பயணம் ரத்து செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், தென் மாநில முதல்​வர்​கள் மாநாட்டை முன்​னிட்டு கோவளம் மற்​றும் சுற்று வட்​டாரப் பகு​தி​களில் தீவிர பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. மாநாடு நடை​பெறும் பிஷர்​மேன் கோவ் ஓட்​டல் வளாகம், கிழக்கு கடற்​கரைச் சாலை மற்​றும் முக்​கிய சந்​திப்​பு​களில் காவல் துறை பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. விருந்​தினர் தங்​குமிடங்​கள், போக்​கு​வரத்து வழித்​தடங்​கள் மற்​றும் பொது​மக்​கள் பாது​காப்பை உறுதி செய்ய சிறப்​புப் பாது​காப்பு திட்​ட​மும் செயல்​படுத்​தப்பட உள்​ளது. மேலும், போக்​கு​வரத்​தி​லும் தற்​காலிக மாற்​றங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

இன்று வருகை

மா​நாட்​டில் பங்​கேற்க மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா இன்று இரவு டெல்​லி​யில் இருந்து தனி விமானத்​தில் புறப்​பட்டு இரவு 7 மணிக்​குச் சென்னை வரு​கிறார். அதன்​பின்​னர் பழைய விமான நிலை​யத்​தில் இருந்​து, காரில் புறப்​பட்டு கோவளம் பிஷர்​மேன் கோவ் ஓட்​டலுக்​குச் சென்று அங்கு இரவு தங்​கு​கிறார். தொடர்ந்து மறு​நாள் நிகழ்ச்​சியை முடித்து கொண்டு பிற்​பகல் 3.45 மணிக்​குச் சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் டெல்லி புறப்​பட்டு செல்​கிறார்.

மேலும், மாநாட்​டுக்கு முன்​பாக இன்று இரவு 6 மாநிலங்​களின் உயர​தி​காரி​கள் கலந்​துரை​யாடல் கூட்​ட​மும் நடை​பெறவுள்​ளது.

SCROLL FOR NEXT