தமிழகம்

தாம்பரம் - சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கோடை​காலத்​தில் சொந்த ஊருக்கு செல்​லும் பயணி​கள் வசதிக்​காக, தாம்​பரம் - சந்​திர​காச்சி இடையே சிறப்பு ரயில் இயக்​கப்​படு​கிறது.

இதன்​படி, தாம்​பரத்​தில் இருந்து இன்று (14-ம் தேதி), வரும் 21, 28 ஆகிய தேதி​களில் காலை 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06075) புறப்​பட்​டு, மறு​நாள் மாலை 6.30 மணிக்கு மேற்​கு​வங்​கம் மாநிலம் சந்​திர​காச்​சியை சென்​றடை​யும்.

          

மறு​மார்க்​க​மாக, மேற்​கு​வங்​கம் சந்​திர​காச்​சி​யில் இருந்து நாளை (15-ம் தேதி), வரும் 22, 29 ஆகிய தேதி​களில் (புதன்​கிழமை) இரவு 9.30 மணிக்கு சிறப்பு ரயில் (06076) புறப்​பட்​டு, வெள்​ளிக்​கிழமை காலை 10.30 மணிக்கு தாம்​பரத்தை வந்​தடை​யும்.

இந்த சிறப்பு ரயில், தாம்​பரத்​தில் இருந்து புறப்​பட்டு சென்னை எழும்​பூர், சூலூர்​பேட்​டை, விஜய​வாடா வழி​யாக சந்​திர​காச்​சியை அடை​யும். இந்த சிறப்பு ரயிலுக்​கான டிக்​கெட் முன்​ப​திவு தொடங்கி இருக்​கிறது. இத்​தகவல் தெற்கு ரயில்வே செய்​திக் குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT