தமிழகம்

கருவிழி ஒளி விலகல் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மருத்துவ அமைப்பின் தலைவராக சூசன் ஜேக்கப் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: கருவிழி ஒளி வில​கல் அறுவை சிகிச்​சைக்​கான சர்​வ​தேச மருத்​துவ அமைப்​பில் (ஐஎஸ்​ஆர்​எஸ்) உலகம் முழு​வதும் 90 நாடு​களை சேர்ந்த லட்​சக்​கணக்​கான மருத்​துவ வல்​லுநர்​கள் உறுப்​பினர்​களாக உள்​ளனர். இந்த அமைப்​பின் தலை​வ​ராக டாக்​டர் அகர்​வால்ஸ் மருத்​து​வ​மனை​யின் முது​நிலை மருத்​துவ நிபுணர் சூசன் ஜேக்கப் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.

ஐஎஸ்​ஆர்​எஸ் அமைப்​பின் தலைமை பொறுப்​பில் அகர்​வால்ஸ் மருத்​துவ குழு​மத்​தின் தலை​வர் மருத்​து​வர் அமர் அகர்​வால் ஏற்​கெனவே இருந்​துள்​ளார். அவருக்கு அடுத்​த​படி​யாக தற்​போது இந்த கவுர​வம், மருத்​து​வர் சூசன் ஜேக்கப்புக்கு கிடைத்​துள்​ளது.

          

பார்​வைக் குறை​பாடு​களை சீராக்​கு​வதற்​கான உயர் நுட்ப அறுவை சிகிச்சைகளை மேம்​படுத்​தும் அமைப்​பான ஐஎஸ்​ஆர்​எஸ், மருத்​துவ ஆராய்ச்சி மற்​றும் நவீன சிகிச்சை முறை​களை உலகம் முழு​வதும் விரிவுபடுத்தி வரு​கிறது.

அதன் நிர்​வாக பொறுப்​பு​களுக்கு தகு​தி​யானவர்​கள் தேர்வு செய்​யப்​படு​வது வழக்​க​மாகும். அந்த வகை​யில், கருவிழி ஒளி வில​கலை சரிசெய்​வதற்​கான (ரிஃப்​ராக்​டிவ்) அறுவை சிகிச்சை மற்​றும் கண் புரை அறுவை சிகிச்சையில் சிறப்பு நிபுணத்​து​வத்​துடன் 25 ஆண்​டு​களுக்​கும் அதி​க​மான அனுபவத்தை கொண்​டிருக்​கும் மருத்​து​வர் சூசன் ஜேக்கப், ஐஎஸ்​ஆர்​எஸ் அமைப்​பின் தலைமை பொறுப்​புக்கு தேர்​வாகி​யுள்​ளார்.

கண் முன்​புற திசு வீக்க பாதிப்​பு​களுக்கு சிகிச்சையளிப்பதில் சிறப்பு நிபுண​ரான மருத்​து​வர் சூசன் ஜேக்கப், உலக அளவில் முதன்​மை​யான 10 கண் மருத்​து​வர்​களில் ஒரு​வ​ராக பலமுறை தேர்​வாகி​யுள்​ளார். சர்​வ​தேச விருதுகளை​யும் மருத்​து​வர் சூசன் ஜேக்கப் பெற்​றுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT