கோப்புப் படம்

 
தமிழகம்

தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் சூரிய சக்தி மின் உற்​பத்தி அதி​கரித்​துள்​ள​தாக மின் வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழ்​நாடு மின் வாரி​யம் சூரிய ஒளி, காற்​றாலை போன்ற புதுப்​பிக்​கத்​தக்க ஆற்​றல் வாயி​லாக மின் உற்​பத்தி செய்ய முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கிறது. தமிழகத்​தில் தற்​போது சூரிய ஒளி மின் நிலை​யங்​களின் உற்​பத்தி திறன் 12,352 மெகா​வாட்​டாக​வும், காற்​றாலைகளின் திறன் 10 ஆயிரம் மெகா​வாட்​டாக​வும் உள்​ளது.

          

தமிழகத்​தின் மின் தேவை தின​மும் சராசரி​யாக 350 மில்​லியன் யூனிட்​கள் என்ற அளவில் இருக்​கும். ஆனால் கோடை காலங்​களில் அதி​கரித்து காணப்​படும். முன்​ன​தாக தமிழகத்​தின் அதி​கபட்ச மின் நுகர்வு என்​பது கடந்த 2024-ம் ஆண்டு ஏப்​.30-ம் தேதி 454 மில்​லியன் யூனிட்​களாக பதி​வானது. இந்த ஆண்டு கோடை​காலம் மற்​றும் தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால் மின் நுகர்வு உச்​சத்​தைத் தொடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

வெயி​லின் தாக்​கம் அதி​கரித்து மின் நுகர்வு அதி​கரித்​தா​லும், சூரிய சக்தி மின் உற்​பத்​தி​யும் அதி​கரித்​துள்​ள​தாக மின் வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிய​தாவது: வெயில் காலம் தொடங்​கியது முதல் வீடு​கள், அலு​வல​கங்​கள் என அனைத்து பகு​தி​களி​லும் குளிர்​சாதனங்​களின் பயன்​பாடு அதி​கரித்​துள்​ளது.

வெயில் அதி​கரித்​த​தால் சூரிய ஒளி மின் உற்​பத்தி கடந்த மார்ச் 24-ம் தேதி 54.8 மில்​லியன் யூனிட், 27-ம் தேதி 55.6 மில்​லியன் யூனிட்​களாக இருந்​தது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி 53.9 மில்​லியன் யூனிட்​கள் உற்​பத்​தியே அதி​கபட்​ச​மாக இருந்​தது. சூரிய சக்தி மின்​சா​ரம் மாநிலத்​தின் தற்​போதைய மின் தேவை​யில் 13 சதவீதத்தை பூர்த்தி செய்​கிறது. இது வணிக மற்​றும் வீட்​டு​பயன்​பாட்​டுக்கு தொடர்ந்து மின்​சா​ரம் வழங்கி உதவு​கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு சூரிய சக்தி உற்​பத்தி திறன் 5 ஆயிரம் மெகா​வாட்​டாக இருந்த நிலை​யில் தற்​போது 12 ஆயிரம் மெகா​வாட்​டாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்டு பிப்​ர​வரி​யில்சூரிய சக்தி வாயி​லாக 1,745 மில்​லியன் யூனிட்​கள் உற்​பத்தி செய்​யப்​பட்ட நிலை​யில் இந்த ஆண்டுகூடு​தலாக 40 மில்​லியன் யூனிட்​கள் உற்​பத்தி செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு கூறினர்​.

SCROLL FOR NEXT