தமிழகம்

வாக்குச்சாவடி, அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் இன்று எஸ்ஐஆர் சிறப்பு உதவி மையங்கள் செயல்படும்

செய்திப்பிரிவு

சென்னை: மாநக​ராட்சி சார்​பில் வாக்​குச்​சாவடி மற்​றும் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்பு வளாகங்​களில் இன்று காலை 8 முதல் இரவு 8 மணி வரை எஸ்​ஐஆர் சிறப்பு உதவி மையங்​கள் நடை​பெறவுள்​ளன.

இது தொடர்​பாக மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: எஸ்​ஐஆர் படிவங்​களைப் பூர்த்தி செய்​வ​தில் வாக்​காளர்​களுக்கு ஏற்​படும் சந்​தேகங்​களுக்கு தீர்வு காண​வும், வாக்​காளர்​கள் மற்​றும் அவர்​களது உறவினர் பெயர்​கள் 2005-ம் ஆண்​டின் வாக்​காளர் பட்​டியலில் இடம் பெற்ற விவரங்​களைக் கண்​டறிய​வும், வாக்​காளர்​களுக்கு உதவும் வகை​யிலும், கடந்த நவ.18 முதல் 25-ம் தேதி வரை 8 நாட்​களுக்கு சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட அனைத்து (947) வாக்​குச்​சாவடி மையங்​களி​லும், வாக்​காளர் உதவி மையங்​கள் அமைத்து பெரும்​பாலான படிவங்​கள் பெறப்​பட்​டன.

மேலும் பூர்த்தி செய்​யப்​பட்ட படிவங்​களை திரும்​பப் பெற குறைந்த நாட்​களே உள்ள நிலை​யில், எஸ்​ஐஆர் பணி​களில் ஒரு சிறப்பு நடவடிக்​கை​யாக வாக்​காளர்​களிட​மிருந்து பூர்த்தி செய்​யப்​பட்ட படிவங்​களை மீளப்பெறும் வகை​யில் சென்னை மாவட்​டத்​தில் உள்ள அனைத்து (947) வாக்​குச்​சாவடி மையங்​கள், அதிக வாக்​காளர்​கள் வசிக்​கும் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்பு மற்​றும் பன்​முக வளாக குடி​யிருப்​புப் பகு​தி​களில் சிறப்பு உதவி மையங்​கள், இன்று காலை 8 மணி​முதல் இரவு 8 மணிவரை செயல்​படும்.

எனவே, வாக்​காளர்​கள் இந்த சிறப்பு வாக்​காளர் உதவி மையத்தை பயன்​படுத்தி பூர்த்தி செய்​யப்​பட்ட படிவங்​களை விரைந்து வழங்க வேண்​டும்.

SCROLL FOR NEXT