கோப்புப் படம்
கும்பகோணம்: சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பாபநாசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேர்தலில் வாக்களித்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் பாபநாசம் பண்டாரவாடையைச் சேர்ந்தவர் மும்தாஜ்பேகம் (51). இவர், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் நேற்று முன்தினம் மீண்டும் சிங்கப்பூருக்குச் செல்ல திருச்சி விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மும்தாஜ் பேகம் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சட்டவிரோதமாக வாக்கு செலுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி முகேஷ்ராம் கவுதம், பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மும்தாஜ்பேகம் மீது வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.