செந்தில் பாலாஜி, அசோக் குமார் |கோப்புப் படம்

 
தமிழகம்

வருமானவரி அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: செந்தில் பாலாஜியின் தம்பி கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்

செய்திப்பிரிவு

கரூர்: கரூரில் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் தாக்​கப்​பட்ட வழக்​கில், முன்​னாள் அமைச்​சர் வி.செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மார், கரூர் நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜரானார்.

அதி​முக ஆட்​சிக் காலத்​தில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​ச​ராக இருந்த வி.செந்​தில்​பாலாஜி, வேலை வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்​ற தாகக்கூறி பதிவு செய்​யப்​பட்ட வழக்​கின் தொடர்ச்​சி​யாக, 2023 மே 26-ம் தேதி அவரது சகோ​தரர் அசோக்​கு​மாருக்கு தொடர்​புடைய கரூர் ராமகிருஷ்ணபுரம் வீட்​டில் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தச் சென்​றனர்.

அப்​போது அதி​காரி​களை தடுத்து நிறுத்​தி, அவர்​கள் வந்த வாக​னத்தை சேதப்​படுத்​தி​யதுடன், பெண் அதி​காரி ஒரு​வரை முற்​றுகை​யிட்டு தாக்​கிய​தாகக் கூறி கரூர் நகர போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்த வழக்​கின் விசா​ரணைக்​காக போலீ​ஸார் அண்​மை​யில் அசோக்​கு​மாரை தேடி சென்னை எம்​ஆர்சி நகரில் உள்ள அவரது வீட்​டுக்​குச் சென்​றனர். இதையடுத்​து, அசோக்குமார் உள்பட 100-க்​கும் மேற்​பட்ட திமுகவினர் முன்​ஜாமீன் பெற்​றனர்.

இதனிடையே முன்​ஜாமீன் நிபந்​தனை​யின்​படி கரூர் விரைவு நீதி​மன்ற நீதிபதி மகேஷ் முன்​னிலை​யில் நேற்று ஆஜரான அசோக்​கு​மார், பிணை உத்​தர​வாதம் அளித்​துவிட்டு திரும்​பி​னார். அவருடன் அரவக்​குறிச்சி எம்​எல்ஏ இளங்கோ, கரூர் மாநகராட்சி மண்​டலக் குழுத் தலை​வர் எஸ்​.பி.க​னக​ராஜ், தி​முக நிர்​வாகி​கள் மற்​றும் வழக்​கறிஞர் விஜயகு​மார்​ உள்​ளிட்​டோர்​ வந்​திருந்​தனர்​.

SCROLL FOR NEXT