குதிரை பேர வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆஜர்: போலீஸார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

தவெக எம்எல்ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: தவெக எம்​எல்​ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்ட வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்​கு​மார் ஆஜராகி கையெழுத்​திட்​டனர். அப்​போது, அவர்​களிடம் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக விசா​ரணை நடை​பெற்​றது.

சட்​டப்​பேர​வைத் தலை​வருக்கு எதி​ரான தீர்​மானத்​தில், தவெக நிலைப்​பாட்​டுக்கு எதி​ராக வாக்​களிக்​க தனக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசப்​பட்​ட​தாக ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா அளித்த புகாரின் அடிப்​படை​யில், சென்னை திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​கு பதிவு செய்​து, இது​வரை 14 பேரை கைது செய்​துள்​ளனர்.

இந்​த சம்​பவத்​தில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது தம்பி அசோக்​கு​மார் ஆகியோ​ருக்​கும் தொடர்பு இருப்​ப​தாகக் கூறி இரு​வரை​யும் கைது செய்ய போலீ​ஸார் நடவடிக்கை மேற்​கொண்​டனர்.

நிபந்தனை முன்ஜாமீன்: இந்​நிலை​யில், இரு​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் கோரி மனு தாக்​கல் செய்​தனர். ​தொடர்ந்து, இரு​வருக்​கும் நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்கி நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. உத்​தரவு நகல் கிடைத்த 15 நாட்​களுக்​குள் சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் சரணடைய வேண்​டும்.

தலா ரூ.25 ஆயிரத்​துக்​கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்​கான இரு நபர் உத்​தர​வாத​மும் வழங்க வேண்​டும். தின​மும் காலை மற்​றும் மாலை திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட வேண்​டும் எனவும் நீதி​மன்​றம் தெரி​வித்​திருந்​தது.

அதன்​படி, செந்​தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நேற்று முன்​தினம் சரணடைந்து ஜாமீன் பெற்​றார். தொடர்ந்​து, நேற்று காலை 10.45 மணி​ அள​வில் செந்​தில் பாலாஜி​யும் அவரது தம்பி அசோக்​கு​மாரும் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் விசா​ரணை அதி​காரி​யான காவல் துணை ஆணை​யர் ஜெயச்​சந்​திரன் முன்​னிலை​யில் ஆஜராகினர். இளை​ய​ராஜா எம்​எல்ஏ அளித்த புகாரின் அடிப்​படை​யில், இரு​வரிட​மும் சுமார் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

குறிப்​பாக, ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்​ட​தாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்டு குறித்து உங்​கள் பதில் என்ன? வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள 14 பேருக்​கும் உங்​களுக்​கும் என்ன தொடர்​பு? புகார் அளிக்​கப்​பட்ட பிறகு உடனடி​யாக விசா​ரணைக்கு ஆஜரா​காமல் தலைமறை​வானது ஏன்? என்பன உள்​ளிட்ட பல்​வேறு கேள்வி​களை எழுப்​பினர். போலீ​ஸாரின் அனைத்து கேள்வி​களுக்​கும் பதிலளித்த செந்​தில் பாலாஜி, விசா​ரணை முடிந்​ததும் வெளியே வந்​தார்.

அப்​போது செந்​தில் பாலாஜி​யிடம் விசா​ரணை குறித்து செய்​தி​யாளர்​கள் கேள்வி எழுப்​பினர். அதற்​கு, ‘‘இன்​னொரு நாள் விளக்​கம் அளிக்​கிறேன்​’’ என்று​ கூறி​விட்​டு காரில்​ ஏறிச்​ சென்​றார்​.

SCROLL FOR NEXT