காரைக்குடி அமராவதி புதூரில் பிரச்சாரம் செய்த சீமான்.

 
தமிழகம்

“எதிரிகளால் எங்கள் வெற்றியை தள்ளிப்போட முடியும்; தடுக்க முடியாது” - காரைக்குடியில் சீமான் உறுதி

செய்திப்பிரிவு

காரைக்குடி: தமிழகத்​தில் பொருளா​தார நெருக்​கடி வர வேண்​டாம் என்​றால் எங்​களுக்கு வாக்​களி​யுங்​கள். நாதக வெற்​றியை எதிரி​களால் தள்​ளிப்​போட முடி​யும், தடுக்க முடி​யாது என காரைக்​குடி​யில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி​னார்.

சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி அமராவ​திபுதூர், தேவகோட்​டை​யில் நாம் தமிழர் கட்சி வேட்​பாள​ரும், அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சீமான் நேற்று தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: வீடு​களை வாடகைக்கு பிடித்​துக் கொடுப்​பவர் வீட்டு புரோக்​கர். அதே​போல, வெளி​நாடு​களுக்​குச் சென்று முதலீடு​களை கொண்டு வருபவர் நாட்டு புரோக்​கர். 400 ஆண்​டு​களுக்கு முன்​பு, வணி​கம் செய்ய வந்து நாட்​டைப் பிடித்​துக் கொண்​ட​வர்​களை மிக​வும் சிரமப்​பட்​டு, உயிர்த் தியாகங்​கள் செய்து விரட்டி அடித்​தோம். அவர்​களை மீண்​டும் வா, வா என்று அழைக்​கின்​றனர். உழைப்பை சுரண்டி லாபத்தை எடுத்​துச் செல்​லத்​தான் பன்​னாட்டு நிறு​வனங்​கள் வரு​கின்​றன. நாடு பொருளா​தார விடு​தலை அடைய​வில்லை என்​றால், அது சுதந்​திர நாடு அல்ல, அடிமை நாடு.

தனி​யார்​ம​யம் மற்​றும் உலகமயப் பொருளா​தா​ரத்தை கைவிட்​டு, தற்​சார்​பு, பசுமை பொருளா​தா​ரத்தை கட்​டமைக்க திட்​ட​மிட்​டுள்​ளேன். சேவை எல்​லாம் தனி​யாரிடம் உள்​ளது. அதை அரசிடம் கொண்டு வரு​வேன். அரசி​யல், கல்வி எல்​லாமே வியா​பார​மாகி விட்​டது. காசு கொடுத்​தவர்​கள் கருத்​துக் கணிப்​பில் முந்​துகின்​றனர். நான் காசு கொடுப்​ப​தில்​லை, அதனால் எப்​போதும் பின்​தங்​கியே இருப்​பேன். தேர்​தல் முடிவு வந்​ததும் நான் முந்​து​வேன்.

நான் யாருக்​கும் ரூ.1,000 கொடுக்க மாட்​டேன், உள்​ளூரிலேயே ரூ.5,000 வரு​வாய் கிடைக்க ஏற்​பாடு செய்​வேன். மற்ற அரசி​யல்​வா​தி​கள் மக்​களை வாக்கு என்று பார்க்​கின்​றனர், நான் உயி​ராக பார்க்​கிறேன். தமிழகத்​தில் பொருளா​தார நெருக்​கடி வர வேண்​டாம் என்​றால் எங்​களுக்கு வாக்​களி​யுங்​கள். ஆளும் கட்​சிகளின் பொருளா​தா​ரம் சாரா​யம். எங்​களது பொருளா​தா​ரம் பால். நீங்​கள் உழைக்​கும் பணத்​தை, உழைப்பே இல்​லாமல் ஜிஎஸ்டி என்ற பெயரில் அடவடி​யாக பறித்து வரு​கிறது மத்​திய அரசு.

நாம் நடத்​து​வது கட்சி அல்ல, மக்​களுக்​கான மாற்​றத்​துக்​கான புரட்​சி. 36 லட்​சம் வாக்​கு​களை நாம் 1 கோடியே 36 லட்​சம் வாக்​கு​களாக மாற்ற முடி​யும். கோடிகளை கொடுக்​காமல் கொள்​கையை சொல்லி வாக்கு பெற முடி​யும். வாக்​குக்கு அனை​வரும் காசு, இலவசம் கொடுக்​கின்​றனர். ஏனென்​றால் அவர்​களிடம் நம்​பிக்கை இல்​லை.

நம்​பிக்கை இல்​லாதவர்​களிடம் நாட்டை ஒப்​படைக்க முடி​யாது. நாம் மானமுள்ள தமிழன் என்று காட்ட வேண்​டும். வறுமை​யும், தோல்​வி​யும் கற்​றுக் கொடுக்​காததை, எந்த பல்​கலைக்​கழக​மும் கற்​றுக் கொடுக்​காது. நமது வெற்​றியை எதிரி​களால் தள்​ளிப்​ போட முடி​யும், தடுக்க முடி​யாது. இவ்​வாறு பேசி​னார்.

SCROLL FOR NEXT