சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 8-வது நாளாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். | படங்கள்: எல்.சீனிவாசன் |

 
தமிழகம்

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

செய்திப்பிரிவு

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் சென்​னை​யில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

8-வது நாளாக ஆசிரியர்கள் குடும்​பத்​தினருடன், சென்னை ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே சாலை​யில் அமர்ந்து நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​த​போது ஏற்​பட்ட தள்​ளு​முள்​ளு​வில் சிலருக்கு காயம் ஏற்​பட்​டது.

போராட்​டம் குறித்து எஸ்​எஸ்​ டிஏ பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் கூறும்​போது, ‘‘ஒற்றை கோரிக்​கையை வலி​யுறுத்தி போராடி வரு​கிறோம். கடந்த தேர்​தலின்​போது எங்​கள் கோரிக்​கையை ஏற்ற திமுக, அதை தேர்​தல் வாக்​குறு​தி​யாக​வும் அறி​வித்​தது.

ஆனால், இது​வரை நிறைவேற்​ற​வில்​லை. ஊதிய முரண்​பாடு களை​யப்​ப​டா​விட்​டால், பள்​ளி​கள் திறந்​த ​பிறகும் போராட்​டம் தொடரும். தமிழக

அரசு எங்​களை அழைத்துப் பேசி கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும்’’ என்​றார்.

இதற்​கிடையே இடைநிலை ஆசிரியர் மீதான கைது நடவடிக்​கை​யைக் கண்​டித்​துள்​ளதோடு, அவர்​களது கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும் என பாமக தலை​வர் அன்​புமணி, நாம் தமிழர் ஒருங்​கிணைப்​பாளர் சீமான் மற்​றும் தமிழ்​நாடு உயர்​நிலை, மேல்​நிலைப்​பள்ளி பட்​ட​தாரி ஆசிரியர் கழகத்​தின் நிறு​வனர் அ.மாய​வன், தமிழ்​நாடு மேல்​நிலைப்​பள்ளி தொழிற்​கல்வி ஆசிரியர் கழகத்​தின் தலை​வர் செ.​நா.ஜ​னார்த்​தனன் உள்​ளிட்​டோர்​ வலி​யுறுத்​தி​யுள்​ளனர்​.

SCROLL FOR NEXT