தமிழகம்

சுட்டெரிக்கும் கோடை வெப்பம்: வெயிலில் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டாம் - பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் கோடை வெயி​லின் தாக்​கம் அதி​கரித்​துள்​ள​தால், பகல் நேரங்​களில் நேரடி வெயி​லில் தொழிலா​ளர்​களைப் பணி​யில் ஈடு​படுத்த வேண்​டாம் என்று தொழில் நிறு​வனங்​களுக்கு பொது சுகா​தா​ரத் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தமிழகத்​தின் பெரும்​பாலான மாவட்​டங்​களில் 100 டிகிரி ஃபாரன்​ஹீட்​டைத் தாண்டி வெப்பம் பதி​வாகி வரு​கிறது. கட்​டு​மானப் பணி​யாளர்​கள், தெரு​வோர வியா​பாரி​கள் மற்​றும் விவ​சா​யத் தொழிலா​ளர்​கள் போன்​றோர் நீண்​டநேரம் நேரடி வெயி​லில் பணி​யாற்​று​வ​தால், ‘ஹீட் ஸ்ட்​ரோக்’ எனப்​படும் உடல் வெப்ப அதிர்ச்​சிக்கு உள்​ளாகி மருத்​து​வ​மனை​களில் அனு​ம​திக்​கப்​படும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.

இதைத் தவிர்க்க தொழில் நிறு​வனங்​களும், கட்​டிட உரிமை​யாளர்​களும் தொழிலா​ளர் நலன் கருதி சில முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும் என்று வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பொது சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: அதிக வெப்ப நிலை​யில் நேரடி​யாகப் பணி​யாற்​றும்​போது உடலில் விரை​வாக நீர்ச்​சத்து இழப்பு ஏற்​படும்.

இதை கவனிக்​கத் தவறி​னால் உடல் உறுப்​பு​களின் இயக்​கம் பாதிக்​கப்​பட்​டு, உயி​ரிழப்பு ஏற்​படும் அபாய​மும் உள்​ளது. எனவே, தொழிலா​ளர்​களின் நலன் கருதி நிறு​வனங்​களும், கட்​டிட உரிமை​யாளர்​களும் உரிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

சுட்​டெரிக்​கும் பகல் நேரத்​தை தவிர்த்​து, அதி​காலை முதல் காலை வரை​யிலும், மீண்​டும் மாலை முதல் இரவு வரை​யிலும் பணி நேரங்​களை மாற்​றியமைக்க வேண்​டும்.

உடல் சோர்​வைத் தவிர்க்க தொழிலா​ளர்​களுக்கு ஓ.ஆர்​.எஸ் கரைசல் மற்​றும் நீர்ச்​சத்து நிறைந்த பானங்​களை வழங்க வேண்​டும். திறந்​தவெளி​யில் பணி​யாற்​று​பவர்​களுக்கு போதிய நிழல் வசதி​களை ஏற்​படுத்​திக் கொடுக்க வேண்​டும். இவ்வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT