தமிழகம்

சுவர் இடிந்து பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம்: பட்டியலின ஆணைய இயக்குநர் ஆய்வு

செய்திப்பிரிவு

திரு​வள்​ளூர்: சுவர் இடிந்து பள்ளி மாணவர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, தேசிய பட்​டியலின ஆணைய மண்டல இயக்​குநர் ஆய்வு மேற்​கொண்​டார். திரு​வள்​ளூர் மாவட்​டம் ஆர்​.கே.பேட்டை அரு​கே​யுள்ள கொண்​டாபுரம் அரசு உயர்​நிலைப் பள்ளி மாணவர் மோகித்​(11) சுவர் இடிந்து விழுந்​த​தில் உயி​ரிழந்​தார்.

இதுதொடர்பாக தலைமை ஆசி​ரியர், முதன்​மைக் கல்வி அலு​வலர் மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலர் மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு தேசிய பட்​டியலின ஆணைய தமிழ்​நாடு, புதுச்​சேரி மண்டல இயக்​குநர் ரவிவர்​மன், கொண்​டாபுரம் அரசு உயர்​நிலைப்​பள்​ளி​யில் ஆய்வு மேற்​கொண்​டார்.

கைப்​பிடிச் சுவர் இடிந்து விழுந்த இடம், வகுப்​பறை​களைப் பார்​வை​யிட்​டதுடன், பள்​ளிக் கட்​டிடத்​தின் தரம் உள்​ளிட்​டவை குறித்து தலைமை ஆசிரியர் மற்​றும் பள்​ளிக்​கல்​வி, பொதுப்​பணித் துறை அதி​காரி​களிடம் விசா​ரணை மேற்​கொண்​டார்.

தொடர்ந்​து, திருத்​தணி கோட்​டாட்​சி​யர் கனி​மொழி, டிஎஸ்பி கந்​தன் ஆகியோரிடம் விசா​ரணை மேற்​கொண்ட அவர், மாணவர் மோகித் வீட்​டுக்​குச் சென்​று, அவரது பெற்​றோருக்கு ஆறு​தல் கூறி​னார்.

மாணவர் உயிரிழப்பு தொடர்பாக அவர்களிடமும் விசாரணை நடத்தினார். பிறகு செய்​தி​யாளர்​கள் பேசிய ரவிவர்​மன் “மோகித் உயி​ரிழப்பு தொடர்​பாக தயாரிக்​கப்​படும் ஆய்​வறிக்​கை​யின் அடிப்​படை​யில், மேல் ​நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றார்.

இதே​போல, அந்​தப் பள்ளி வளாகத்​தில் உள்ள ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி கழி​வறை, சுற்​றுச்​சுவர் உள்​ளிட்​ட​வற்றை திருத்​தணி எம்​எல்ஏ சந்​திரன் ஆய்வு செய்​து, உயர்​நிலைப் பள்ளி வளாகத்​தில் உள்ள பழுதடைந்த கட்​டிடங்​களை அகற்​று​மாறு பொதுப்​பணித் துறை அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​னார்​.

SCROLL FOR NEXT