உச்ச நீதிமன்றம் 
தமிழகம்

கோவையில் 54 இளநிலை உதவியாளர் நியமனங்களை ரத்து செய்தது செல்லும்: உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2021-ம் ஆண்டு அதி​முக ஆட்​சிக்காலத்​தில், கோவை மாநக​ராட்​சி​யில் நியமிக்​கப்​பட்ட 54 இளநிலை உதவி​யாளர்​களின் நியமனங்​களை ரத்து செய்த சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தின் உத்​தரவை எதிர்த்து தொடரப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது

கடந்த 2021-ம் ஆண்டு அதி​முக ஆட்​சிக் காலத்​தில், உள்​ளாட்​சித் துறை அமைச்​ச​ராக எஸ்​.பி.வேலுமணி பதவி வகித்​த​போது, கோவை மாநக​ராட்​சி​யில் 69 இளநிலை உதவி​யாளர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​காக விண்​ணப்​பங்​கள் கோரப்​பட்​டன.

இந்​தப் பணி​யிடங்​களுக்​காக 654 பேர் விண்​ணப்​பித்த நிலை​யில், அதில் 440 பேர் நேர்​முகத் தேர்வு மற்​றும் சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அழைக்​கப்​பட்​டனர். இதனையடுத்​து, 54 நபர்​களின் பெயர் இறு​தி​செய்​யப்​பட்டு அவர்​களுக்கு நியமன ஆணை வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், இந்த நியமனங்​களை ரத்து செய்​யக் கோரி, கருணை அடிப்​படை​யில் 2016-ம் ஆண்டு தூய்​மைப் பணி​யாள​ராக நியமிக்​கப்​பட்ட ஈஸ்​வரி, கனக மணி, கவுசல்​யா, ரஞ்​சித்​கு​மார் உள்​ளிட்ட 50-க்​கும் மேற்​பட்​டோர் சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

அந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர்​நீ​தி​மன்ற தனி நீதிப​தி, தேர்வு நடை​முறை​களில் மனு​தா​ரர் பங்​கேற்​காத நிலை​யில், பணி நியமனங்​களை எதிர்த்து வழக்கு தொடர அவருக்கு தகுதி இல்லை என்று கூறி மனுவை தள்​ளு​படி செய்​தார். இதனையடுத்​து, தனி நீதிபதி உத்​தரவை எதிர்த்து ஈஸ்​வரி, உள்​ளிட்​டோர் சென்னை உயர்​நீ​தி​மன்​றம் டிவிசன் அமர்வு முன்பு மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தனர். அதில், இளநிலை உதவி​யாளர் பணிக்​கான முறை​யான விளம்​பரங்​கள் வெளி​யிடப்​ப​டாத​தால் தங்​களுக்கு உரிய தகு​தி​கள் இருந்​தும், தேர்வு நடை​முறை​களில் பங்​கேற்க முடிய​வில்லை என தெரி​வித்​திருந்​தனர்.

மேலும், அப்​போதைய உள்​ளாட்​சித்​துறை அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி​யின் செல்​வாக்​கின் காரண​மாக, விதி​முறை​கள் பின்​பற்​றப்​ப​டா​மலும், இடஒதுக்​கீட்டு நடை​முறை​கள் பின்​பற்​றப்​ப​டா​மலும் ஒரே நாளில் 54 பேர் நியமிக்​கப்​பட்​ட​தாக​வும், அந்த நியமனங்​களை ரத்து செய்ய வேண்​டும் என்​றும் கோரி​யிருந்​தனர்.

இந்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த உயர்​நீ​தி​மன்ற டிவிசன் அமர்​வு, தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​ய நடை​முறை​கள் பின்​பற்​றப்​ப​டா​மல் கோவை மாநக​ராட்​சி​யில் 54 பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்​டுள்​ளதை அறிய முடிகிறது.

இந்த நியமனங்​கள் சட்​ட​விரோத​மானவை என்​றும் நேர்​மையற்ற முறை​யில் புற​வாசல் வழி​யாக நடை​பெற்ற நியமனங்​களாக கருதப்பட வேண்​டிய​வை, எனவே கோவை மாநக​ராட்​சியில் நியமிக்​கப்​பட்ட 54 இளநிலை உதவி​யாளர்​களின் நியமனங்​களை ரத்து செய்து உத்​தர​விட்டதோடு, முறை​கே​டான நியமனங்​களுக்குக்காரண​மான அதி​காரி​கள் மீது துறைரீதி​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும், காலி​யாகும் பணி​யிடங்​களுக்கு தகு​தி​யான நபர்​களை விதி​முறை​களின்​படி நியமனம் செய்​ய​ வேண்டும் என்றும் உயர்​நீ​தி​மன்ற டிவிசன் அமர்வு கடந்த ஜூன் 18-ம் தேதி ஆணை​யிட்​டது.

மேல்​முறையீட்டு மனு: சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தின் ஆணையை எதிர்த்து பணியை இழந்த நிவே​தா, சக்தி கவி​தா, வினோத் குமார் உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனு, உச்​சநீ​தி​மன்​றத்​​தின் நீதிப​தி​கள் கே.​வி.​விஸ்​வ​நாதன், அருண் பாலி ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், இளநிலை உதவி​யாளர்​கள் பணிக்கு 654 விண்​ணப்​பங்​களில் 440 விண்​ணப்​பங்களை ஏற்று அதன் பின்​னர் 54 விண்​ணப்​பங்​களை ஒரே நாளில் இறுதி செய்து நியமன ஆணை வழங்​கியது எப்​படி, நீதிப​தி​களாகிய எங்​களுக்கே தினசரி பட்​டியலிடப்​படும் சுமார் 65 வழக்​கு​களை முழு​மை​யாக ஆராய போதிய நேரம் கிடைக்​காத நிலை​யில், 654 விண்​ணப்​பங்​களை பெற்​று​கொண்டு அதில் 440 விண்​ணப்​பங்​களை ஒரே இரவில் எவ்வாறு பரிசீலனை செய்​திருக்க முடி​யும்?

மேலும் விண்​ணப்​பங்​கள் வரவேற்​ப​தற்கு ஈ-பேப்​பரில் மட்​டுமே விளம்​பரம் பிரசுரிக்​கப்​பட்​டது ஏன்? 54 பேர் எந்த தகுதி அடிப்​படை​யில் நியமனம் செய்​யப்​பட்​டார்​கள்? அவர்​களுக்கு வழங்​கப்​பட்ட மதிப்​பெண் எங்கே என கேள்விகளை எழுப்​பிய நீதிப​தி​கள், 54 இளநிலை உதவி​யாளர்​ பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்​ட​தில் சட்ட​விரோதம் இருப்​ப​தாக​வும் விதி​முறை​கள் மீறல் இருப்​பதை கண்​டு​பிடித்​திருப்​ப​தாக​வும் கூறினர்.

அப்​போது மனு​தா​ரர்​கள் தரப்​புக்கு ஆஜராகி​யிருந்த மூத்த வழக்​கறிஞர் வி.​வி.கிரி, தற்​போது உச்ச நீதி​மன்​றத்தை நாடி உள்ள மனு​தா​ரர்​கள் மாற்​றுத் திற​னாளி​கள் ஆவர். எனவே, மீண்​டும் இளநிலை உதவி​யாளர் பணி​யிடங்​களுக்​கான விண்​ணப்​பம் வரவேற்​கப்​படும்​போது, தற்​போது உச்ச நீதி​மன்​றத்தை அணுகி​யுள்ள மாற்​றுத் திற​னாளி​களுக்கு கருணை அடிப்​படை​யில் முன்​னுரிமை அளிக்க வேண்​டுமென கோரிக்கை வைத்​தார்.

ஆனால், மனு​தா​ரர்​கள் தரப்பு கோரிக்​கையை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், முறை​கே​டாக பணி​யில் நியமிக்​கப்​பட்​ட​வர்​கள் அனை​வரை​யும் உடனடி​யாக பணியி​லிருந்து நீக்க வேண்​டும் என உத்​தரவு பிறப்​பித்த​தோடு, சென்​னை உயர்​நீ​தி​மன்​றத்​தின்​ டிவிசன்​ அமர்​வு வழங்​கிய ஆணை​யை உறு​தி செய்​தும்​ உத்​தரவிட்​டனர்​.

SCROLL FOR NEXT