சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம் 
தமிழகம்

தமிழக அரசின் டான்ஃபெட் நிறுவனத்துக்கும் ஆர்டிஐ சட்டம் பொருந்தும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் கட்​டுப்​பாட்​டின் கீழ் உள்ள டான்ஃபெட் நிறு​வனத்​துக்​கும் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டம் (ஆர்​டிஐ) பொருந்​தும் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழ்​நாடு கூட்​டுறவு வி்ற்​பனை இணை​ய​மான டான்ஃபெட், எந்​தெந்த நிறு​வனங்​களிடம் இருந்து உரங்​களை கொள்​முதல் செய்​கிறது, எந்த அடிப்​படை​யின்​கீழ் உரங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது, அவற்​றின் கொள்​முதல் விலை என்ன, விற்​பனை விலை என்ன என்​பது குறித்து தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின்​கீழ் பி.ஜோ​தி​பாசு என்​பவர் கேள்வி எழுப்​பி​யிருந்​தார்.

அதற்கு டான்ஃபெட் நிறு​வனத்​தின் பொது தகவல் அதி​காரி, ‘கூட்​டுறவு சங்​கங்​கள் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் வரம்​புக்​குள் வராது என ஏற்​கெனவே உச்ச நீதி​மன்​றம் தலப்​பாலம் கூட்​டுறவு சங்க வழக்​கில் உத்​தர​விட்​டுள்​ள​தால், இதுதொடர்​பான விவரங்​களை வழங்க முடி​யாது’ என மறுப்பு தெரி​வித்​தார்.

இதை எதிர்த்து மாநில தகவல் ஆணை​யத்​தில் ஜோதி​பாசு தொடர்ந்த மேல்​முறை​யீடும் தள்​ளு​படி செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், டான்ஃபெட் நிறு​வனத்​தின் நிலைப்​பாட்டை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பி.ஜோ​தி​பாசு வழக்கு தொடர்ந்​தார்.

‘டான்ஃபெட் நிறு​வன​மும் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் வரம்​புக்கு உட்​பட்​டது​தான். எனவே, தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின்​கீழ் கொள்​முதல் தொடர்​பாக கேட்​கப்​பட்ட கேள்வி​களுக்​கான பதில்​களை குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் வழங்க அந்​நிறுவன பொது தகவல் அலு​வலருக்கு உத்​தர​விட வேண்​டும்’ என மனு​வில் அவர் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்​சுமி நாராயணன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் எம்​.புருஷோத்​தமன் ஆஜராகி, ‘‘ஒரு கூட்​டுறவு அமைப்​புக்கு மாநில அரசு கணிச​மான நிதி​யுதவி அளித்​தால் அந்த கூட்​டுறவு சங்​கம் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் வரம்​புக்​குள் வரும் எனவும் உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது’’ என வாதிட்​டார்.

அதே​போல நீதி​மன்​றத்​துக்கு உதவ நியமிக்​கப்​பட்ட வழக்​கறிஞர் எம்​.எஸ்​.பழனி​சாமி​யும் இதே கருத்தை வலி​யுறுத்​தி​னார். ஆனால், டான்ஃபெட் நிறு​வனம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள் சி.​விக்​னேஷ்வரன், கீதா தாமரைச்​செல்​வன் ஆகியோர் டான்ஃபெட் நிறு​வனத்​துக்கு தகவல் அறி​யும் உரிமைச் சட்​டம் பொருந்​தாது என வாதிட்​டனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி வி.லட்​சுமி நாராயணன், ‘‘டான்ஃபெட் நிறு​வனம் தமிழக அரசின் கட்​டுப்​பாட்​டின்​கீழ், தமிழக அரசு வழங்​கும் நிதி​யுத​வி​யால் செயல்​படு​கிறது. அந்த நிறு​வனத்தை நிர்​வகிக்​கும் அதி​காரியை​யும், பொது தகவல் அதி​காரியை​யும் தமிழக அரசு​தான் நியமி்க்​கிறது.

டான்ஃபெட் நிறு​வனத்​துக்​கும் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டம் பொருந்​தும். எனவே, மனு​தா​ரர் கோரிய கேள்வி​களுக்கு பதிலளிக்க முடி​யாது என பொது தகவல் அதி​காரி மறுப்பு தெரிவிக்க முடி​யாது’’ என கூறி அதுதொடர்​பான உத்​தரவை ரத்து செய்து உத்​தர​விட்​டார்.

மேலும், டான்ஃபெட் நிறு​வனத்​தின் பொது தகவல் அதி​காரி, மனு​தா​ரர் சட்​டப்​படி கோரி​யுள்ள கேள்வி​களுக்​கான பதில்​களை உரிய விவரங்​களு​டன் 4 வார காலத்​துக்​குள்​ அளிக்​க வேண்​டும்​ எனவும்​ நீதிப​தி உத்​தரவி்ட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT