ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் வருவாய் ஆய்வாளர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இணைய வழியில் ரூ.25 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். முன்னதாக 2-ம் தேதி நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.66 லட்சம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.