மேகேதாட்டு அணை 
தமிழகம்

உச்ச நீதிமன்றத்தில் மேகேதாட்டு அணை விவகாரத்தில் மறுபரிசீலனை மனு தாக்கல்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழக நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் வெளி​யிட்ட அறிக்​கை:காவிரி ஆற்​றின் குறுக்கே மேகே​தாட்​டு​வில் பெரிய அணை கட்ட கர்​நாடக அரசு முயற்​சித்​ததை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கு​களில் உச்ச நீதி​மன்​றத்​தின் ஆணை கடந்த நவம்​பர் 22-ல் வெளி​யானது.

அதில், மேகே​தாட்டு அணை தொடக்க நிலை​யில்​தான் உள்​ளது. இத்​திட்​டம் உச்ச நீதி​மன்ற முந்​தைய தீர்ப்​புக்கு உட்​பட்​டதா என்​பதை நிபுணர்​கள் அடங்​கிய மத்​திய நீர்​வளக் குழு​மம்​தான் தீர்​மானிக்க முடி​யும். மேலும், தமிழகம் தனது வாதங்​களை மத்​திய நீர்​வளக் குழு​மத்​திடம் முன்​வைக்​கலாம் என்று தெரி​வித்​துள்​ளது.

மேலும், இந்த தீர்ப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்ள சில கருத்​துகளும் முரணாக உள்​ளன. எனவே, இந்த வழக்​கில் தமிழகம் சார்​பாக வாதிடும் மூத்த வழக்​கறிஞர்​களின் ஆலோசனைப்படி​யும், முதல்​வரின் அறி​வுறுத்​தலின்​படி​யும் உச்ச நீதி​மன்​றத்​தின் ஆணையை மறு​பரிசீலனை செய்​யக்​கோரி தமிழக அரசு தற்​போது மனு தாக்​கல் செய்​துள்​ளது.

அத்​துடன், மத்​திய நீர்​வளக் குழு​மத்​திட​மும், மேகே​தாட்டு அணை எவ்​வாறு தமிழகத்​துக்கு பாதக​மாக இருக்​கும் என்​பதை குறிப்​பிட்டு ஒரு விரி​வான மனு அளிக்​கப்​பட்​டுள்​ளது. டெல்டா விவ​சா​யிகள் நலன்​களை பாது​காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. கர்​நாடகா முயற்​சியை தமிழக அரசு ஒரு​போதும் அனு​ம​திக்​காது.

SCROLL FOR NEXT