சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர். படம்: எல்.சீனிவாசன்

 
தமிழகம்

வார்டு உறுப்பினர் நிதியை விடுவிக்க வேண்டும்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கருப்பு உடை அணிந்து வந்தனர்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு மாநக​ராட்​சிக்கு தேவை​யான நிதியை ஒதுக்​கி, வார்டு உறுப்​பினர் மேம்​பாட்டு நிதியை விடுவிக்க வேண்​டும் என மாநக​ராட்சி மாமன்ற கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

சென்னை மாநக​ராட்​சி​யின் ஆகஸ்ட் மாத மாமன்ற கூட்​டம் மேயர் பிரியா தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. துணை மேயர் மு.மகேஷ்கு​மார் மற்​றும் மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

இக்​கூட்​டத்​திற்கு வருகை தந்த மேயர், துணை மேயர் மற்​றும் திமுக மாமன்ற உறுப்​பினர்​கள் அனை​வரும் வார்டு மேம்​பாட்டு நிதி ஒதுக்​கப்​ப​டாததைக் கண்​டித்து கருப்பு உடை​யில் பங்​கேற்று தங்​களது எதிர்ப்பை பதிவு செய்​தனர்.

கூட்​டம் தொடங்​கியதும் ஆளுங்​கட்சி தலை​வர் (தி​முக) ராமலிங்​கம் வார்டு மேம்​பாட்டு பணி​களுக்​கான நிதியை உடனடி​யாக விடுவிக்க வலி​யுறுத்தி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்​மானத்​தைக் கொண்டு வந்​தார்.

கவன ஈர்ப்பு தீர்​மானத்​தின் மீது உறுப்​பினர்​கள் பேசி​ய​தாவது: துணை மேயர் மு.மகேஷ்கு​மார்: ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட பிறகு கடந்த 4 மாதங்​களாக மாநக​ராட்சி பெரிய தொய்வை சந்​தித்து வரு​கிறது. நிதி நிலைமை சீராக இல்​லை. கடந்த 4 மாதத்​தில் தமிழக அரசு ரூ.21 ஆயிரம் கோடி கடனாக பெற்​றுள்​ளது.

மாநக​ராட்சி ஆணை​யர் முதல்​வரிடம் நிதி ஒதுக்க வேண்​டுமென வலி​யுறுத்த வேண்​டும். அதி​முக உறுப்​பினர் சத்​தி​ய​நாதன்: கடந்த 3 மாதங்​களாக வார்டு மேம்​பாட்டு நிதி வந்து சேர​வில்​லை. மழைக்​கால முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளும் முழு​மை​யாக செயல்​படுத்​தப்​பட​வில்​லை.

மக்​கள் பிர​தி​நி​தி​களாக இருந்​தும், மக்​களுக்கு பணி​யாற்ற முடி​யாத நிலை நீடித்​தால், உறுப்​பினர்​கள் அனை​வரும் ஒட்​டுமொத்​த​மாக ராஜி​னாமா செய்​து​விட்டு போகலாம். இதற்கு மேயர் பிரியா பதிலளித்து பேசுகை​யில், “வார்டு மேம்​பாட்டு நிதி என்​பது உறுப்​பினர்​களின் சொந்த செல​வுக்​கானது அல்ல.

அது நூல​கம், உடற்​ப​யிற்சி கூடம், சமு​தாய நலக்​கூடம் போன்ற பொது​மக்​களின் அத்​தி​யா​வசி​யப் பணி​களுக்​கானது. நிர்​வாக ரீதி​யான தடைகளால் பல பணி​கள் நிலு​வை​யில் இருப்​பது உண்​மை​தான். இதுகுறித்து தமிழக அரசிடம் வலி​யுறுத்​து​வோம்.” என்று தெரி​வித்​தார்.

இதே​போல் பாஜக, விசிக, காங்கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், மதி​முக உறுப்​பினர்​களும் தீர்​மானத்​துக்கு ஆதரவு தெரி​வித்​ததையடுத்​து, அனைத்து கட்​சிகளின் ஆதர​வுடன் கவன ஈர்ப்பு தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டு, ஆணை​யரிடம் வழங்​கப்​பட்​டது.

குடிநீரில் கழிவு கலப்பு

திமுக உறுப்பினர் ராஜன் பேசுகையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலுமே குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்து வருகிறது. அதற்கான ஆய்வறிக்கை என்னிடம் உள்ளது.

மாநகராட்சியின் சுகாதாரத்துறை மூலமாக ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ஆய்வறிக்கையை ஆணையரிடம் சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT